'எஸ்எம்எஸ்', 'பாஸ் என்கிற பாஸ்கரன்'
என்று காமெடியின் மூலம் கல்லாகட்டிய படங்களை இயக்கிய ராஜேஷ், தற்போது
உதயநிதியை வைத்து ஒரு 'கல் ஒரு கண்ணாடி' படத்தை இயக்கியிருக்கிறார். இவர்
இயக்கிய முதல் இரண்டு படங்களில் பரிச்சயமான ஹீரோக்கள் நடித்தாலும்,
மூன்றாவது படமான 'ஓகே ஓகே'வில் நடித்திருப்பது உதயநிதி. சந்தானத்தையும்,
காமெடியையும் நம்பி, உதயநிதியை ஹீரோவாக்கியிருக்கும் ராஜேஷ் ரிசல்டுக்காக
காத்திருக்கிறார் என்றாலும் கூடவே வேறு ஒரு விஷயத்திற்காகவும்
காத்திருக்கிறாராம். அது ஒன்றுமில்லை, தனது அடுத்தப் படமான 'ஆல் இன் ஆல்
அழகுராஜா' படத்தை கார்த்திக்குக்காக இயக்கப்போவதாக சொல்லிவந்த ராஜேஷ்,
தற்போது அந்த கதையை அஜித்திற்காக எழுதியதாக தனது நண்பர்களிடம்
கூறுகிறாராம். 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தைப் பார்த்த அஜித், ராஜேஷிடம்
எனக்கு ரொமாண்டிக் வித் ஆக்ஷன் ஸ்கிரிப்ட் பண்ணமுடியுமா? என்று கேட்டாராம்.
அதனால் 'பில்லா-2' படப்பிடிப்பு முடித்து விட்டு வரும் அஜித்திடம் இந்த
கதையை சொல்வதற்காக காத்திருக்கிறாராம் ராஜேஷ்.
நெய்க்காக.. வெண்ணை சட்டிய ஒடச்ச கதையால இருக்கு....
No comments:
Post a Comment