Tuesday, July 31, 2012

தமிழ்த் திரையுலகில் next சூப்பர் ஸ்டார் ajith

தமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்த இடத்தில் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு நடிகர் என்றால் அது அஜீத்குமார் என்பதை அவரைபிடிக்காதவர்களும் ஒப்புக்கொள்ளும் உண்மை.
அஜீத்குமார் நடித்து படம் வருகிறதென்றால் ரசிகர்களுக்கு தீபாவளி என்றே சொல்லலாம்..
தமிழ்த் திரையுலகில் 1993 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வா அவர்கள் இயக்கிய அமராவதி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அஜீத்குமார்.தமிழ் சினிமாவை அப்போது ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த சினிமா பிரபலங்கள் தங்களின் வாரிசுகளை களத்தில் இறக்கிக் கொண்டிருந்த காலம்.
சொல்லப்போனால் கடின முயற்சி எடுத்து கம்பெனி கம்பெனியா நடிக்க வாய்ப்பு கேட்டு கதாநாயகர்களாக நடிக்க வேண்டிய காலம் மாறி வாரிசுகளும் பண முதலாளிகளும் எளிதாக கதாநாயகர்களாக நடிக்க ஆரம்பித்த காலம் அது.
ரஜினிகாந்தும் கமலஹாசனும் மூத்த நடிகர்கள் என்று பட்டம் சூட்டப்பட்டபிறகு அடுத்த ரஜினி கமல் யார் என்று ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் தான் அஜீத் குமார் அறிமுகம ஆகிறார்.
தமிழ் சினிமா செக்கசெவேரென்று இருப்பவர்களை முழுமையான நாயகனாக அங்கீகரித்ததில்லை.வேண்டுமானால் ஓரிருவரை சுட்டிக்காட்டலாம்.
அமராவதிக்குப்பிறகு பாசமலர்கள், பவித்ரா என்று அடுத்தடுத்து படங்கள் நடித்தார்.ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார்.அதுவரை தமிழ் சினிமாவோ ரசிகர்களோ பெரிதாய் வரவேற்கவில்லை.
1995 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த் இயக்கிய ஆசை படம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.அகத்தியன் இயக்கிய காதல் கோட்டை அவரை உச்சிக்கே தூக்கிச் சென்றது.அதன் பிறகு தொடர் தோல்வி படங்கள் என்றாலும் எவரது தனிப்பட்ட உதவியுமின்றி தன் உழைப்பை மட்டுமே நம்பி நடித்துக் கொண்டிருந்தவருக்கு ‘காதல் மன்னன்’ என்ற படம் அவரது உழைப்பிற்கு ஊதியமாக கிடைத்தது.
முதல்முறையாக அஜீத்தை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா,அதில் அஜீத்தின் மற்றொரு பரிமாணத்தையும் காட்டினார்.
அதுவரை காதல் கதைகளில் நடித்துக் கொண்டிருந்த ஆசை நாயகன் அஜீத்தை வாலி படம் வேறு கோணத்திற்கு கொண்டு சென்றது. இன்னும் கொஞ்சம் கூடுதலாக கரடுமுரடான கதாபாத்திரத்தில் அமர்க்களம் என்ற படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்தார் சரண்.அப்படத்தில் ஆரம்பித்ததுதான் அஜீத்தின் ஸடைல்.. நடை,உடை , பாவணை என அனைத்தை மாற்றினார் சரண்.
‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாடலைப் போல இன்னுமொரு பாடலுக்கு அப்படி நடிப்பாரா எனத் தெரியவில்லை. பாத்திரமாகவே மாறியிருந்தார். அவரின் ரசிகர் வட்டம் பெரிதானது.
அமர்க்களம் பெற்ற வெற்றிதான் அஜீத்திற்கென்று ஒரு ஸ்டைல் ஒரு பேட்டர்னை உருவாக்கியது.அதுவரையிலும் இயக்குனர்களின் கதைக்கு நடித்துக் கொண்டிருந்த அஜீத்,அப்போதுதான் காணாமற் போனார்.
அஜீத்திற்கென்றே கதை பண்ண ஆயத்தமானார்கள் இயக்குனர்கள்.அப்படி உருவான கதை தான் தீனா.ஆசை நாயகனாக இருந்த அஜீத் அடிதடி நாயகனாக மாறிப்போனார்.ஏற்கனவே ஆசை நாயகனாக அஜீத்தை கொண்டாடிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ‘தல’ அஜீத் இன்னும் உற்சாகத்தை ஊட்டினார்.
தீனா பெரிய வெற்றியை அடைய அஜீத்தும் தனது அடுத்த கட்டத்தை அடைந்தார்.சாதாரண காதல் கதைகளில் நடிப்பதை தவிர்த்தார் அடுத்த ரஜினிகாந்த் அஜீத் தான் என உறுதியாக ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த காலம் அது.ரசிகர்களை திருப்தி படுத்த வெயிட்டான கதாபாத்திரம் உள்ள கதைகளிலேயே நடிக்க ஆரம்பித்தார்.
அப்படி நடித்த படங்கள் சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சனேயா, ஜனா, அட்டகாசம், பரமசிவன், ஜீ ,திருப்பதி, வரலாறு , ஆழ்வார், கிரீடம் போன்ற படங்கள் அனைத்தும் தோல்வியையே கொடுத்தன. ஆனாலும் தயாரிப்பாளர்களுக்கு பெரிய நட்டத்தை ஏற்படுத்திவிடவில்லை.
பெரிய சறுக்கலில் இருந்த அஜீத் சற்று மனக் குழப்பத்தில் இருக்க நேரடி படம் வேண்டாம் என முடிவெடுத்து ‘பில்லா’ ரீமேக்கில் நடித்து வெற்றி கண்டார். ஆனாலும் அதைத்தொடர்ந்து அவர் நடித்த அசல் ,ஏகன் போன்ற படங்கள் பெரிய தோல்வியைத் தந்தன. பிறகு மங்காத்தா பெரிய வெற்றி என்று சொல்லலாம் .இப்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் பில்லா 2 எதிர்பார்த்த வெற்றியை ஈட்ட முடியாமல் தவிக்கிறது.
சரி.. நன்றாக நடிக்கும் நடிகர்களில் ஒருவராகவும் பெரிய ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் அஜித்குமாரின் படங்கள் ஏன் தொடர் தோல்வியைத் தருகின்றன என்ற கேள்விக்கு பதிலாய் ஒரே மாதியான கதையம்சம் உள்ள படங்களிலேயே நடிக்கிறார்..
மூன்றாம் தர ரசிகனுக்கான படம் நடிப்பதில்லை..தனிப்பட்ட ரசிகர்களை மனதில் வைத்து கதைகளை தீர்மானிக்கிறார்.. அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான கதையை தேர்வு செய்யவில்லை..போன்றவை வந்து நிற்கின்றன..
இன்றைய சினிமா ரசிகர்கள் பிரபலங்களின் படங்களை பார்ப்பது மட்டுமல்லாமல் கதையம்சமுள்ள புதிய நடிகர்களின் படங்களையும் பார்க்கிறார்கள். எனவே எந்த நடிகர் நடித்தாலும் கதையம்சம் இருந்தால் தான் படம் ஓடும் என்பதற்கு ரஜினிகாந்தின் சில படங்கள் மற்றும் நான் ஈ படம் ஒரு உதாரணம்.
தொடர் தோல்வியை சந்தித்து வரும் அஜீத்குமார் ரீமேக் படத்தில் நடித்திருக்ககூடாது.நன்றாக நடிக்கும் ஆற்றலை கொண்ட ஒரு நடிகர் ரீமேக்கில் நடிக்கும் அவசியம் இல்லை என்றே கருதுகின்றனர் மக்கள் .
முதல் காட்சியில் விசிலடிக்கும் ரசிகர்கள் எந்த ஒரு படத்தையும் வெற்றிப் படமாக மாற்ற முடியாது. பொதுமக்கள் பார்த்து ரசித்தாலே ஒரு படம் வெற்றியடைகிறது.அப்படியானால் ஒரு படம் அவர்களுக்கான படமாகத்தான் இருக்கவேண்டும்.
குறிப்பிட்ட ரசிகர்களுக்கானதாக இருக்ககூடாது.இதுவே அஜீத்தின் தொடர் தோல்விக்கு காரணமாக இருக்கலாம் என யோசிக்கத் தோன்றுகிறது.அஜீத்குமார் நடிக்கும் படங்கள் அவருடைய ரசிகர்களுக்கான படமாக இருக்கிறது.சமீபத்திய அவரது படங்களின் விமர்சனங்களைப் பார்த்தால் ‘இது அவரது ரசிகர்களுக்கான படம்’ என்றே இறுதியில் குறிப்பிடுகிறார்கள்.
சரி அஜீத்குமார் இனி என்ன செய்யவேண்டும்..
1.ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்..
(தாதாயிசம்,ஆண்டி கேரக்டர்,நடை,உடை,பாவணை)
2.படித்த, படிக்காத, நகர, கிராம மக்கள் என அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும்,புரியும் வண்ணம் கதைகளை தேர்வு செய்யவேண்டும்.
3.வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க முன் வர வேண்டும்.
4.இயக்குனரை தீர்மானிப்பதைக் காட்டிலும் கதையை தீர்மானிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
5.நல்ல,வித்தியாசமான கதைகளை வைத்துக் கொண்டு கோடம்பாக்கத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் நாளைய இயக்குனர்களிடம் கதையைக் கேட்க வேண்டும்..
6.ஏனைய பிரபல நடிகர்களை போல அல்லாமல் பல புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்புக்களை கொடுக்க வேண்டும்.அஜித்தின் வெற்றி படங்கள் அனைத்துமே புது முக இயக்குனர்களே ..உதாரணம.
(காதல் மன்னன் -சரண்,முகவரி-துரை,வாலி-எஸ்.ஜே சூர்யா,தீனா-ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற அனைத்து படங்களும் அஜீத்தை அடுத்த அத்தியாயத்திற்கு கொண்டு சென்றவை என்பது குறிப்பிடத்தக்கது)
7.அஜீத் படம் மேல்தட்டு மக்களுக்குத்தான் என்ற நிலைப்பாட்டை அவர் மாற்றியமைக்க வேண்டும்.
8.ஒவ்வொரு படத்திலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
(ரஜினிகாந்த்,கமலஹாசன் போன்றோரின் வளர்ச்சிக்கு அவர்களின் நகைச்சுவை மிகப்பெரிய பங்கு என்பது குறிப்பிடத்தக்கது)
மேற்கண்டவைகள் நடக்குமாயின் அஜீத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதில் எந்த ஐயமுமில்லை.

Thursday, July 12, 2012

தமிழகமெங்கும் ‘தல’ மேனியா: நாளை பில்லா 2 ரிலீஸ்

தமிழகமெங்கும் ‘தல’ மேனியா: நாளை பில்லா 2 ரிலீஸ்

Billa 2 Will Be Released On July
 
 
தமிழ்நாட்டில் சினிமா ரசிகர்களிடையே இப்பொழுது பில்லா 2 ரிலீஸ் பற்றிய பேச்சுதான். 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ள பில்லா 2 ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு கவுண்டவுன் புதன்கிழமை முதலே தொடங்கிவிட்டது.
முன்பெல்லாம் ரஜினி, கமல், விஜயகாந்த் நடித்த திரைப்படங்கள் ரிலீஸ் என்றாலே ஒருவாரத்திற்கு முன்பிருந்தே படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர் முன்பு கட் அவுட் வைப்பதும், கொடி, தோரணம் கட்டுவதும், களை கட்டும். இப்பொழுது அதே போன்ற காட்சிகள் அஜீத் நடிப்பில் வெளிவர உள்ள பில்லா 2 ரிலீஸ் ஆகும் தியேட்டர் முன்பு பார்க்க முடிகின்றன. கடந்த இருதினங்களுக்கு முன்பிருந்தே பல அடி உயர அஜீத் கட் அவுட்கள் ஆங்காங்கே முளைத்துள்ளன.
படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன. கொடிகளும், தோரணங்களுமாய் கட்டி ரசிகக்கண்மணிகள் கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர். பில்லா-2 படம் ஜூலை 13ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அன்றைய தினம் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம், காவடி, என எடுத்தாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை.
ஐ.என்.இ. இன்டர்நேஷனல் மற்றும் ஒய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ள பில்லா-2 படத்தில் அஜித், பார்வதி ஓமனக்குட்டன், ப்ரூனா அப்துல்லா நடித்துள்ளனர். சக்ரி டோல்ட்டி இயக்கியுள்ள இப்படம் முடிந்து மாதங்கள் சில ஆகிவிட்டன. கடந்த மே மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளால் தள்ளிக்கொண்டு போனது.
சமீபத்தில் இப்படத்திற்கு தணிக்கை துறை ஏ சான்று அளித்த நிலையில் பட ரிலீஸ் மேலும் தள்ளிபோனது. இந்த நிலையில் ஜூலை இறுதியில் பில்லா வெளியாகலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர்.
பக்கா ஆக்ஷ்ன், த்ரில்லராக அஜித் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது பில்லா-2. வருகிற ஜூலை 13ம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறோம். தமிழகம் முழுக்க சுமார் 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது என்று தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
ஏற்கனவே 13ம் தேதி வெள்ளிக்கிழமை ராசி இல்லாத நாள் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. இந்த நிலையில் இவ்வளவு காத்திருந்த தயாரிப்பாளர்கள் ஜூலை 13 ம் தேதி வெள்ளிக்கிழமை பில்லா 2 ரிலீஸ் தேதியாக தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த நம்பிக்கையை பொய்யாக்கி வெற்றிவாகை சூடுவாரா பில்லா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Wednesday, July 11, 2012

பில்லா 2 புக்கிங்... ஒரு வாரம் ஃபுல்.. முதல் ஷோ டிக்கெட் விலை ரூ 650!!

ரஜினி - கமல் என்ற வரிசைக்கு அடுத்த நடிகர்களில் நல்ல ஓபனிங் என்றால் அது அஜீத் படத்துக்குதான்.
ப்ளாப் படமாக இருந்தாலும் அஜீத் படத்துக்கு முதல் 5 நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடுவது வழக்கம்.
மங்காத்தா என்ற வெற்றிக்குப் பிறகு அஜீத் நடிப்பில் வரும் படம் பில்லா 2. இந்தப் படத்தில் அஜீத், யுவன் சங்கர் ராஜா தவிர, வேறு தெரிந்த முகங்கள் இல்லை.
இயக்குநர் சக்ரிக்கு ஒரு வகையில் இதுதான் முதல் படம். இதற்கு முன் அவர் உன்னைப் போல் ஒருவனை இயக்கினாலும், அதில் கமலின் பங்களிப்பு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.
நாயகிகள் பார்வதி ஓமனக்குட்டன், ப்ருனா அப்துல்லா இருவருக்குமே இது முதல் படம். எனவே அவர்களால் படத்துக்கு பெரிய பலன் கிடையாது.
இருந்தும் அஜீத் படம் என்ற ஒரே காரணத்துக்காக சென்னை திரையரங்குகளில் பில்லா 2 க்கு ஒரு வாரத்துக்கான புக்கிங் முடிந்துவிட்டது.
பல இடங்களில் ப்ளாக்கில் ரூ 500 வரை இந்தப் படத்துக்கு டிக்கெட் விற்கப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு அரங்கில் கவுன்டரிலேயே 650 ரூபாய்க்கு முதல் காட்சிக்கான டிக்கெட் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Saturday, July 7, 2012

அஜித்தின் பாப்புலாரிட்டி நீர்க்குமிழியா?



இப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் பத்திரிகைகளிலும் அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாகவும் இருக்கலாம். ஆனால் இப்போது இவருக்கு வந்திருக்கும் இந்த திடீர் செல்வாக்கு ரஜினி, எம்.ஜி.ஆர் போல் ‘திரையில் முகம் காட்டினாலே படம் ஓடிவிடும்’ என்பது போன்ற செல்வாக்கா? ஒரு மிகச்சிறிய எனக்குத்தெரிந்த விதத்தில் அஜித்தின் செல்வாக்கை அனுகியிருக்கிறேன். பார்க்கலாம்..

சுமார் எட்டு வருடங்களுக்கு முன், அதாவது அஜித்தின் ஜனா என்கிற படம் ரிலீசான ஏப்ரல் 17, 2004, விஜய்யின் கில்லி ரிலீசான ஏப்ரல்14, 2004ம் நாளில் இருந்து ஆரம்பிப்போம். வில்லன் என்கிற வெற்றிப் படத்துக்குப் பிறகு கார் ரேஸ் மோகத்தில், அதில் சாதிக்க வேண்டும் என்கிற வெறியில் சினிமாவை கொஞ்ச காலம் மறந்து இருந்தார் அஜித். ரசிகர்களின் வற்புறுத்தலுக்காகவும் தன் கார் ரேஸ் செலவுக்காகவும் சரியா கதையை தேர்ந்தெடுக்காமல், ‘ஆஞ்சனேயா’, ‘ஜனா’ என்று வரிசையாக சறுக்க ஆரம்பித்தார். வில்லன் படம் கொடுத்த வெற்றியை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

இந்த நேரத்தில் தான் வசீகரா, பகவதி என்று மிகவும் சுமாரான படங்கள் கொடுத்துக்கொண்டிருந்த விஜய் ‘திருமலை’ என்று ஒரு ஹிட் கொடுத்தார். சொல்லப்போனால் அவர் தந்தை, விஜய்க்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார், தொடர்ந்து 4 படங்கள் 100நாட்களை கடந்து ஓடின என்று (ப்ரண்ட்ஸ் - 175 நாள், குஷி - 150 நாள், ப்ரியமானவளே - 125 நாள், பத்ரி - 100 நாள்).. அதற்குப் பின் தான் விஜய் சறுக்க ஆரம்பித்தார் வசீகரா, தமிழன், புதிய கீதை என்று.. கட்டாய வெற்றி தேவை என்கிற சூழலில் அவருக்கு இயக்குனர் ரமணா மூலம் அமைந்தது திருமலை வெற்றி. திருமலை ரிலீஸ் ஆன அதே நாளில் வந்தது தான் ஆஞ்சநேயா.. ‘வில்லன்’ பட வெற்றியை அஜித்துக்கு தக்க வைத்துக்கொள்ளத்தெரியவில்லை. அப்போது அவர் பேட்டிகளும் மிகவும் ‘ரா’வாக இருக்கும். ’நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், ‘எனக்கு சினிமாவ விட ரேஸ் தான் முக்கியம்’ என்று மனதில் பட்டதை எல்லாம் சொல்லி செமத்தியாக தன் இமேஜை கெடுத்துக்கொண்டார். இது நடந்தது 2003 தீபாவளியில்.

பின் 2004 சித்திரையில் தான் அந்த மாபெரும் வெற்றியும் படு மோசமானா தோல்வியும் நடந்தன. விஜய்க்கு கில்லி, அஜித்துக்கு ஜனா. ”ஜனா - the power machine னு பேர் வச்சதுக்கு பதிலா, ஜனா - the xerox machineனு வச்சிருக்கலாம்” என்று ஒரு பத்திரிகை ஓபனாகவே அசிங்கப்படுத்தியது. எல்லா சேனல் பத்திரிகைகளில் விஜய் பேட்டி, கில்லி டீம் பேட்டி என்று கலைகட்ட ஆரம்பித்தது. அஜித்தை சீண்டுவாரில்லை. அதே வருடத்தில் விஜய்க்கு உதயா என்றொரு ஃப்ளாப் வந்தாலும், கில்லியின் வெற்றி அதை மறைத்துவிட்டது. வருட கடைசியில் ‘மதுர’ படம் வந்து ரசிகர்களை திருப்திப்படுத்தி ஓரளவு வெற்றியும் பெற்றது. ஆனால் அஜித்துக்கு அந்த வருட தீபாவளிக்கு வந்த ‘அட்டகாசம்’ ரசிகர்களை கூட சற்று ஏமாற்றிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நேரத்தில் தான் விஜய்க்கு என்று ஒரு மாஸ் உருவானது. அவர் என்ன நடித்தாலும் படம் ஹிட் என்கிற பெயர் வந்தது. 2005ல் அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த 3 படங்களும் (திருப்பாச்சி, சச்சின், சிவகாசி) வெற்றி பெற்றன. சச்சின் சுமாரான வெற்றி தான். ஏன்னா அது சந்திரமுகியோடு போட்டி போட்டது. அஜித் நடித்து இந்த வருடம் மிகப்பெரும் எதிர்பார்ப்போடு வந்த “ஜீ” அட்டர் ஃப்ளாப் ஆனது. தொடர்ந்து இரண்டு வருடங்களாக அஜித்துக்கு ஒரு படம் கூட ஹிட் இல்லை. விஜய்க்கு கிட்டத்தட்ட அனைத்துப்படங்களும் ஹிட். அடுத்த ரஜினி, வசூல் மன்னன் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அஜித்துக்கு எப்பவுமே இருக்கும் “ஓப்பனிங் கிங்” என்கிற பட்டம் கூட ஆட்டம் காண ஆரம்பித்தது.

2006ல் இருவரும் தைப்பொங்களில் பரமசிவன், ஆதி என்று மோதினார்கள். இரண்டு படங்களுமே தோல்வி என்றாலும், ஆதியை விட பரமசிவன் நன்றாக ஓடியது. 2006ல் ஆதியே சறுக்கியதால் விஜய் அந்த வருடம் அடுத்து படம் நடிக்காமல் காத்திருந்தார். அஜித்துக்கு இதே வருடத்தில் வந்த திருப்பதி ஏ.வி.எம். என்கிற பேனர் தயாரித்த காரணத்தால் 100நாட்கள் ஓட்டப்பட்டது. வருமா வராதா என்று காக்கவைத்த ‘வரலாறு’ தீபாவளிக்கு வந்து சக்கை போடு போட்டது. தான் ஒரு அஜித் ரசிகன் என்று கூறவே வெட்கப்பட்டவர்கள் இப்போது தான் கொஞ்சமாக வெளியே தைரியமாக சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த முறையும் அஜித் சறுக்கும் போது கே.எஸ். ரவிக்குமார் தான் வெற்றி கொடுத்து காப்பாற்றினார்.

ஆனால் அஜித்தால் இந்த வெற்றியையும் தக்க வைக்க முடியவில்லை. 2007 தைப்பொங்கலில் அஜித் ஆழ்வாராக வந்து, வந்த சுவடே தெரியாமல் போய்விட்டார். விஜய் போக்கிரியாக வந்து ரெக்கார்ட் பிரேக் ஹிட் கொடுத்தார்.

இந்த சூழலில் தான் சூர்யா வரிசையாக கஜினி, ஆறு, சில்லுனு ஒரு காதல், வேல் என்று வித்தியாசமான கதைகளில் நடித்து ’விஜய்க்கு நான் தான் சரியான போட்டி’ என்று வேகமாக முன்னேறினார். அஜித்தை அவர் ரசிகர்களைத்தவிர எல்லாரும் மறந்து விட்டார்கள். விஜய் மேலும் “ஒரே மாதிரி நடிக்கிறார்” என்கிற குற்றச்சாட்டும் வலுக்க ஆரம்பித்தது. 2007ல் பொங்களுக்கு வந்த வேல் என்கிற ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் அந்த வருடம் முழுக்க தாங்குவது போன்ற ஹிட்டை கொடுத்தார் சூர்யா. விஜய் தன் நடிப்புத்திறமையை (!!!!) காட்ட அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்தார். விஜய்யின் “என்ன நடித்தாலும் ஓடும்” என்கிற பிம்பம் இந்த இடத்தில் தான் உடைய ஆரம்பித்தது.

அஜித் வருடத்தின் முடிவில் பில்லா என்னும் பிளாக்பஸ்டர் கொடுத்து தப்பித்துவிட்டார். ஆனால் விஜய் அழகிய தமிழ் மகன் என்கிற ஒரே படத்தின் மூலம் எஸ்.எம்.எஸ் ஜோக் வரை வம்புக்கு இழுக்கப்பட்டார்.

2008, 2009, 2010ல் வரிசையாக குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என்று விஜய் அடுத்தடுத்து ஃப்ளாப்களை கொடுத்து, ஒரு காலத்தில் அஜித் ரசிகர்கள் தங்களை அஜித் ரசிகன் என்று சொல்லிக்கொள்ள எப்படி கூச்சப்பட்டார்களோ, கிண்டலுக்கு பயந்தார்களோ அதே நிலை இப்போது விஜய்க்கு வந்துவிட்டது. அதுவும் எந்த ஒரு நடிகனும் தன்னுடைய 50வது படத்தை சுறா மாதிரி கொடுக்க மாட்டான். அஜித் வழக்கம் போல பில்லா வெற்றியை தக்க வைக்க முடியாமல் ஏகன், அசல் என்று ஃப்ளாப் கொடுத்தாலும், அவருக்கு என்று இருக்கும் கூட்டம் தைரியமாகவே இருந்தது. ஏன்னா, விஜய்யும் இப்போ ஃப்ளாப் லிஸ்டில் தானே இருக்கிறார்.

இரு முக்கிய ஹீரோக்கள் தொடர்ந்து ஃப்ளாப் கொடுத்தாலும் “என்ன நடிச்சாலும் ஹிட்டு ஆகும்” என்கிற இடம் ஒருவருக்கு போய்த்தானே ஆக வேண்டும். அது இப்போது இருந்தது சூர்யா கையில். விஜய்க்கு எப்படி 2004, 2005 உச்சத்தில் இருந்ததோ சூர்யாவுக்கு 2008ல் இருந்து 2010 வரை அதே உச்சம் இருந்தது. விஜய் படத்துக்கு அஜித் ரசிகர்களும் அஜித் படத்துக்கு விஜய் ரசிகர்களும் பெரும்பாலும் போக மாட்டார்கள். ஆனால் அஜித், விஜய் இருவரின் ரசிகர்களும் சூர்யா படத்துக்கு போனார்கள். சூர்யாவிற்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் கம்மி என்றாலும் அவருக்கு, குடும்ப ரசிகர்கள் நிறைய இருந்தனர். குடும்பம் குடும்பமா அவர் படத்தை பார்க்க ஆரம்பித்தனர். அவரும் வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம் என்று பாக்ஸ் ஆபிஸை சிதறடித்துக்கொண்டிருந்தார்.


ஆனாலும் சூர்யாவுக்கும் அந்த “என்ன நடிச்சாலும் ஹிட்டு ஆகும்” என்கிற நீர்க்குமிழ் உடைய ஆரமபித்தது. அவரே அதற்கு காரணம். எல்லா வாரமும் எதாவது ஒரு பத்திரிகையில் பேட்டி, ஊறுகாய், தேங்காய் எண்ணெய், துணிக்கடை என்று எதையும் விட்டு வைக்காமல் விளம்பரம், தன்னடக்கம் என்கிற பெயரில் சுயபுகழ்ச்சி என்று வழமையான ஒரு நடிகன் தான் தானும் என்பதை நிரூபிக்க ஆரம்பித்தார். ”சூர்யா முகம் போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது”, என்று மக்களே வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். சிங்கம் படத்துக்குப்பிறகு அவர் 2001 தீபாவளிக்கு நடித்த ஏழாம் அறிவு எதிர் பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

சரி, இப்போது சூர்யாவிடமும் “என்ன நடிச்சாலும் ஹிட்” பட்டம் இல்லை. அஜித்தும் ஃப்ளாப் கொடுத்துவிட்டார். விஜய், காவலன் என்று ஒரு சுமாரான வெற்றிப்படத்தில் நடித்திருந்தாலும், வேலாயுதம் மறுபடியும் பழைய மாதிரி எஸ்.எம்.எஸ் ஜோக்குகளுக்கு அவரை ஹீரோவாக்கியது. அந்தப்பட்டம் அடுத்த லெவலில் இருக்கும் விக்ரமுக்கோ, சிம்புவுக்கோ தனுஷுக்கோ போகாமல் யாருமே எதிர்பாரா வண்ணம் சூர்யாவின் தம்பி கார்த்திக்கு சென்றது.

கார்த்தி நடித்திருப்பது இது வரை ஆறே ஆறு படம் தான். ஆனாலும் தன்னுடைய மூன்றாவது படத்தில் இருந்தே அவர் என்ன நடித்தாலும் ஓடும் என்கிற பிம்பம் வர ஆரம்பித்துவிட்டது. மக்களுக்கும் அவரின் அசால்ட்டான அலட்டல் இல்லாத நடிப்பு மிகவும் பிடித்துப்போய் விட்டது. 2011ல் அவர் நடித்த சிறுத்தை அனைவரையும் கவர்ந்து அவரையும் முன்னணி நடிகர்கள் லிஸ்ட்டில் சேர்த்தது.

கிட்டத்தட்ட தன் அண்ணன் செய்த அதே தவறை தம்பி கார்த்தியும் செய்ய ஆரம்பித்தார். எல்லா மேடைகளிலும் தோன்றி “என்ன மாமா சௌக்கியமா?” என்று நியூஸ் வாசிக்கும் பெண் “இன்றைய முக்கியச்செய்திகள்” என்று சொல்வதை போல் திரும்ப திரும்ப சொல்லி வந்தார். பேச்சிலும் கொஞ்சம் அலட்டல் தெரிய ஆரம்பித்தது. முன்னணியில் இருக்கும் நான்கு நடிகர்களுக்கும் (அஜித், விஜய், சூர்யா, கார்த்தி) 2011 ஓரளவு நல்ல வருடமாகவே இருந்தது. கார்த்தி வருட ஆரம்பத்தில் சிறுத்தை நடித்திருந்தார். ஆனல் வருடத்தின் பின் பகுதியில் வந்த மற்ற மூவரின் படங்கள் சிறுத்தையின் ஆக்ரோஷத்தை குறைத்தன. அதுவும் அஜித்தின் மங்காத்தா, எந்திரனுக்கு அடுத்தபடியாக வசூலில் சாதனை புரிந்தது.

விஜய், சூர்யா, கார்த்தி என்று அனைவரும் மறக்கடிக்கப்பட்டு எங்கு பார்த்தாலும் “தல”, “அஜித்” என்றே எல்லா பக்கமும் பேச்சுக்கள் வந்தன. மங்காத்தாவில் அஜித்தின் இமேஜ் பார்க்காத நடிப்பும், அவரின் இயல்பான உண்யான சுபாவமும் பலருக்கும் பிடித்திருந்தது. அஜித் என்கிற நடிகனை விட பலரும் அஜித் என்கிற மனிதனை ரசிக்க ஆரம்பித்திருந்தார்கள். இவை அனைத்திற்கும் மூல காரணம் ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக் தான். பலரும் அஜித்தைப் பற்றி அதிரிபுதிரியாக தங்களுக்குத்தெரிந்த உண்மைகளை பேச ஆரம்பித்தார்கள். அது ஒவ்வொரும் share செய்து share செய்து பரவலாக அனைவருக்கும் அவரின் குணம் புரிந்தது. இது போக கலைஞரின் பாராட்டு விழாவில் தைரியமாக “உங்க functionக்கு வரச்சொல்லி எங்கள மிரட்டுறாங்க ஐயா” என்று அவர் பேசியது, இத்தனை நாள் அவர் மீது காரணமே இல்லாமல் வெறுப்பை உமிழ்ந்த பத்திரிகைகளுக்கு கூட அவரை பாராட்ட ஒரு காரணமாய் அமைந்தன. இது அவருக்கும் பொது மக்களிடம் இருந்து கூட மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்தது.

ரசிகர் மன்றத்தை கலைத்தது, அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறந்தது, பேட்டி கொடுக்க மாட்டேன், விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன், படத்தை விளம்பரப்படுத்தி பேச மாட்டேன் என்று அவர் அடம் பிடித்தது, என்று அவர் செய்யும் ஒவ்வொன்றும் பொது மக்களிடம் அவரை உண்மையாக கொண்டு சேர்த்தன. ஒரு காலத்தில் திமிராக இருக்கிறார் என்று அவரை வெறுத்தவர்கள், இன்று அதே திமிருக்காக அவரை விரும்ப ஆரம்பித்துவிட்டனர். அஜித் என்று பேசினால் அவரைப் பிடிக்காதவர்கள் கூட அவரின் நல்ல பண்புகளைப் பற்றி பேசும் சூழல் தான் கடந்த ஒன்னரை ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இது வரை அவரின் கேரியரில் பார்த்தால், “என்ன நடித்தாலும் ஹிட்டு” என்கிற வட்டத்திற்குள் அவர் வந்ததே இல்லை. ஆனால் எப்போதும் முன்னணி நடிகர் லிஸ்டில் இருந்து கொண்டே இருப்பார். அவரின் படங்கள் தொடர்ந்து ப்ளாப் ஆனாலும், அவரின் அடுத்த படத்துக்கு முந்தைய படத்தை விட அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும். அது அஜித் என்கிற நடிகனுக்காக இல்லை. அஜித் என்னும் நிஜ வாழ்க்கையில் நடிக்கத்தெரியாத ஒரு உண்மையான மனிதனுக்காக. பில்லா 2 ட்ரைலர் வெளியிட்ட ஒரே நாளில் 3லட்சம் ஹிட்ஸ் வந்துள்ளது. எந்திரனுக்கு கூட இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் இருந்ததா என்று எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை படம் ஓடாமல் போனாலும் யாரும் முன்பு மாதிரி அஜித்தை குறை சொல்லவோ கிண்டல் செய்யவோ மாட்டார்கள். அவரின் பக்குவம் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் கூட வந்துவிட்டது. அஜித், படமே நடிக்காமல் போனாலும் அவர் மீது மக்களுக்கு இதே அபிப்பிராயம் தொடரும். அவர் நடிகன் என்கிற படியை தாண்டி பக்குவமான மனிதன் என்கிற இடத்தில் அனைவரும் ஆதர்சமாக பார்க்கும் ஒரு இடத்தில் இருப்பதாகவே கருதுகிறேன். அதனால் மற்ற நடிகர்களுக்கு இருந்தது போல், இவருக்கு இப்போது வந்திருக்கும் பாப்புலாரிட்டி “நீர்க்குமிழி” இல்லை. அவரின் எதிர்நீச்சலுக்கு கிடைத்த வைர கிரீடம். அதை யாராலும் உடைக்கவும் முடியாது, அழுக்குப்படுத்தவும் முடியாது.. அஜித் ஆரம்பித்தில் இருந்து இப்போது வரை தன் குணத்தையோ செயல்பாடுகளையோ மாற்றிக்கொண்டதே இல்லை. ஆனால் மக்களை அவர் மாற்றிவிட்டார். தன்னுடைய வெளிப்படையான பேச்சிற்காக கிண்டலும் அசிங்கமும் செய்த மக்களே, இன்று அதே வெளிப்படையான பேச்சுக்காவே அவரை ரசிப்பது, நிஜமாகவே அஜித் என்ற மனிதனுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி. ஒரு படம் வெற்றி அடைவதை விட, ஒரு மனிதன் என்கிற அளவில் அஜித் பெற்றிருக்கும் இந்த வெற்றி இதுவரை சம காலத்தில் எந்த நடிகருக்கும் கிடைக்காதது. அஜித் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன். நீ எப்பவும் டாப் தான் ‘தல’....

Wednesday, July 4, 2012

ரசிகர்களின் நாயகன் …. தல...

ஒரு நடிகரின் பெயரை சொன்னால் !ரசிகர்களின் கரகோசத்தால் !இந்த பூமியே அதிரும் என்றால் !அது தான் இவரின் பெயர் இவரின் ஒவ்வொரு அசைவுக்கு பின்னால் !விசில் சத்தமும் வெடி சத்தம் என்று கைதட்டல்கள் விண்ணை பிளக்கும் என்றால் !அது தான் இவருக்கான அடையாளம் !தல என்கிற ஒரு சொல் பல லட்சம் ரசிகர்களால் கொண்டாட படுவது என்றால் !அது தான் இவர் திறமைக்கான அங்கீகாரம் !இவரின் பெயரை இதயத்தில் சுமக்காத ரசிகர்களே இல்லை !!இவரின் புகழுக்கு அந்த வானம் தான் எல்லை !2011 ஆண்டின் ஈடு இணையில்லா ரசிகர்களின் நாயகன்……………. தல...