Sunday, September 29, 2013

கக்கூஸை விட செல்போனில் பத்து மடங்கு கிருமிகள் அதிகமாம்!



  நாம் உபயோகிக்கும் கழிவறையை விட செல்போனில் பத்துமடங்கு அதிகம் கிருமிகள் இருக்கிறது என்று ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளனர்.

ஆடை இல்லாத மனிதன் அரைமனிதன் என்பது பிரபலமான பழமொழி. அதுபோல செல்போன் இல்லாத மனிதன் செல்லாக்காசு என்று புதுமொழி உருவாகும் அளவிற்கு செல்போனின் ஆதிக்கம் இன்றைக்கு அதிகரித்து வருகிறது. செல்போனை புதிது புதிதாக வாங்குவதாகட்டும். அதற்கு டாப் அப் செய்வதாகட்டும் இளசுகள் முதல் பெரிசுகள் வரை அனைவரும் அதை சரியாக செய்வார்கள். தகவல் தொடர்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு சாதனம் இன்றைக்கு பலவிதமான உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொருவரும் தங்களின் தேவைக்கேற்ப செல்போனை உபயோகப்படுத்துகின்றனர். இந்த செல்போனை நாம் உபயோகிக்கும் அளவிற்கு அதை யாரும் சுத்தமாக வைத்திருப்பதில்லை. சுத்தப்படுத்துவதும் இல்லை. விளைவு கிருமிகளின் கூடாரமாக மாறிவிடுகிறது செல்போன். நாம் நம்முடைய செல்போனை கண்ட இடங்களில் வைக்கின்றோம். பல சூழ்நிலைகளில் பயன்படுத்துகின்றோம். ஆனால் அதனை எப்போதும் சுத்தப்படுத்துவதில்லை அங்கு கிருமிகள் குடியேறுகின்றன.

அரிசோனா பல்கலைக்கழகத்தின் மைக்ரோபயாலஜித் துறை பேராசிரியர் சார்லஸ் கெர்பா என்பவர் நம்முடைய சுற்றுச்சூழலில் நம்முடன் வசிக்கும் கிருமிகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். அவர்தான் செல்போனில் கிருமிகள் வசிப்பதை கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளார்.

மனிதர்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, வயிற்று உபாதை, தொற்றுநோய் பரவல், அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்பட கழிவறையை விட செல்போன்களே மிக அதிக அளவில் காரணமாக இருப்பதாகவும் அவர் மேற்கொண்ட ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏராளமான கிருமிகளைக் கொண்டிருக்கும் செல்போன் எப்போதும் நமது கையிலும், வாய்க்கு அருகேவும் இருப்பதால் பல நோய் உபாதைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது என்று பேராசிரியர் சார்லஸ் கெர்பா தெரிவித்துள்ளார். அடுத்தமுறை செல்போன் மூலமாக காதலிக்கு முத்தம் கொடுக்கும் முன் கொஞ்சம் யோசித்துக்கொள்வது நல்லது.

பூதம் சொன்ன கதை..

முன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன்.

கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர்.

அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் பண மூட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண்மூடித் தூங்கினான் அண்ணன். இதற்குள் தம்பி அதே போல ஒரு பண மூட்டையில் கற்களை வைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக் கொண்டான்.

சற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரன் வரவே தம்பி தன் அண்ணனை எழுப்பி அவரோடு படகில் ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது. படகு நடு ஆற்றில் போகும் போது தம்பி ஒரு மூட்டையை எடுத்து ஆற்றில் நழுவ விட்டு, "ஐயோ அண்ணா பண மூட்டை ஆற்றில் விழுந்துவிட்டதே,'' எனக் கூறினான்.

"போனால் போகட்டும். அது நம் பணமாக இருந்தால் நமக்கே கிடைக்கும்,'' எனக் கூறினான் அமுதன். தம்பியும் தான் தந்திரமாக ஆயிரம் பவுன்களை தட்டி விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். ஆனால், அவன் அவசரத்தில் ஆற்றில் போட்டது பண மூட்டையைதான். கற்களை வைத்துக் கட்டிய மூட்டைதான் அவனிடம் இருந்தது.

அந்த ஆற்றில் ஒரு பூதம் இருந்தது. தம்பி மூட்டையை ஆற்றில் போட்டதும் ஒரு மீனை உடனே விழுங்கச் சொல்லி கட்டளை இட்டது அது. மீனும் அப்பூதம் சொன்னபடி நடந்தது.

பூதம் தம்பி செய்த மோசடியை புரிந்து கொண்டது. எனவே, அந்தப் பண மூட்டையை எப்படியும் அண்ணனிடம் சேர்த்து விட எண்ணி மூட்டையை விழுங்கிய மீன் எங்கும் போகாதபடி காவல் காத்தது.

அண்ணனும், தம்பியும் காசிக்கு வந்து தம் வீட்டை அடைந்தனர். தம்பி வீட்டில் தனியாக ஓரிடத்திற்குப் போய் தன்னிடமிருந்து மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதில் கற்கள் இருப்பதைக் கண்டு, "ஐயோ! நான் அண்ணனை ஏமாற்ற எண்ணி நானே ஏமாந்தேனே...'' என எண்ணி மனம் புழுங்கினான்.

அன்று சில மீனவர்கள் ஆற்றில் வலை போட்ட போது பூதம் மீனவராக மாறி அந்த மீனை எடுத்துக் கொண்டு அண்ணனின் வீட்டுக்குச் சென்றது. அண்ணன் அவன் கேட்டபடி ஒரு பவுனைக் கொடுத்து அந்த மீனை வாங்கிக் கொண்டார். அதனை அவர் தன் மனைவியிடம் கொடுக்கவே அவள் அதனை இரண்டாக நறுக்கினாள். அதன் வயிற்றிலிருந்து பணமூட்டை வெளியே விழுந்தது.

அதைக் கண்டு திகைத்தான் அமுதன். "இது நம் பணமே. இதனை நம்மிடம் கொடுக்கவே இந்த மீனவன் வந்திருக்கிறான். இவனுக்கு எப்படி இது தெரிந்தது?'' என எண்ணி ஆச்சரியப்பட்டான்.

அப்போது, "அமுதா... நீ மிகவும் நல்லவன். இந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு நிறைய உதவிகளைச் செய்கிறாய். ஒரு முறை நீங்கள் படகில் சென்றபோது உன் கையில் இருந்து நழுவிய உணவு பொட்டலத்தை உண்டேன்.

"அது எனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது. அதனால் தான் உன்னுடைய பணமூட்டையை உன் தம்பி வேண்டுமென்றே தூக்கி வீசிய போது அதை விழுங்கும்படி இந்த மீனுக்கு கட்டளை கொடுத்தேன். அந்த மீனையும் எடுத்துக் கொண்டு வந்தேன். நல்லவர்களுக்கு எல்லாமே நல்லதாய் தான் நடக்கும்...'' என்று சொல்லி மறைந்தது.

அதை கேட்டு மகிழ்ந்தான் அமுதன். மறைக்காமல் அதில் பாதியான ஐநுõறு பவுன்களைக் தன் தம்பியிடம் கொடுத்தார். தம்பியும் தனது அண்ணனுடைய கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.

Monday, September 16, 2013

பட்டி(நாய்) என்று பட்டியலிட்ட ஆர்.கே.செல்வமணியின் பேச்சு!!


இயக்குநர் களஞ்சியத்தின் “தமிழ்” எனும் குறும்படம் நேற்று(15-0-2013) ஆர்.கே.வி. பிரிவியூ தியேட்டரில் வெளியிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஆர்.கே.செல்வமணி நிருபர்களை தரகுறைவாக விமர்சித்திருக்கிறார்.

விழாவில் செல்வமணி பேசியதாவது:
தமிழ் உணர்வு கொண்ட குறும்படம் என்பதால் எந்த பத்திரிக்கை நாய்களும் வரவில்லை இதுவே சினிமா நிகழ்ச்சி
என்றால் முன்வரிசையில் பத்து,பதினைந்து நாய்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும், இருபது, முப்பது நாய்கள் பின்வரிசையில் நின்று வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும். ஜம்பது,அறுபது நாய்கள் நடுவில் பேனா ஒன்றை வைத்துக்கொண்டு கிறுக்கிக் கொண்டிருப்பார்கள். அதே மேடையில் மு.களஞ்சியம், மற்ற வி.ஐ.பிகளும் அமர்ந்து செல்வமணியின் பேச்சை ரசித்துக் கொண்டிருந்தனர்.

Sunday, September 15, 2013

ஆரம்பம் படத்தில் முக்கியமானது இல்லையேப்பா: 'தல' ரசிகர்கள் கவலை

ஆரம்பம் படத்தில் தீம் மியூசிக் இல்லாதது அஜீத் ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துள்ள ஆரம்பம் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளது என்று தெரிய வந்துள்ளது. ஆரம்பம் பட பாடல்களை கேட்க அஜீத் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.செப்டம்பர் 19-ம் தேதி ஆரம்பம் இசை வெளியீடு
 ஆரம்பம் படத்தில் முக்கியமானது இல்லையேப்பா: 'தல' ரசிகர்கள் கவலை ஆரம்பம் இந்நிலையில் அவர்களுக்கு ஒரு வருத்தமும் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் படத்தில் தீம் மியூசிக் இல்லாதது தான். ஆரம்பம் படத்தை போன்று அஜீத்தின் முந்தைய படங்களான பில்லா, மங்காத்தா மற்றும் பில்லா 2 படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்தார். அந்த படங்களில் எல்லாம் தீம் மியூசிக் வைத்தவர் ஆரம்பம் படத்தில் மட்டும் அதை வைக்காதது அஜீத் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால் சர்பிரைஸாக தீம் மியூசிக் வைப்பார்கள் என்று ரசிகர்கள் இன்னும் நம்புகின்றனர். யுவன் என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

நான் பெரியவள் ஆனதும் என்னை தான் கட்டிக்கணும்-அஜீத்திடம் கூறிய குட்டி நடிகை

 தான் வளர்ந்து பெரியவளானதும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சரண்யா நாக் அஜீத் குமாரிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்துள்ளார். காதல் படத்தில் சந்தியாவுக்கு தோழியாக வந்தவர் சரண்யா நாக். அதன் பிறகு சந்தியா சில படங்களில் ஹீரோயினாக நடித்துவிட்டு தற்போது சந்தானத்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். லேட்டானாலும் சரண்யா நாக் பொறுமையாக இருந்து ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் தற்போது 4 படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவருக்கு முன் மாதிரி யார் என்றால் அது தனுஷ் தானாம். பெரிதாக லுக் இல்லாவிட்டாலும் அவரின் அபாரமான வளர்ச்சி சரண்யாவை இம்பிரஸ் செய்துவிட்டதாம்.நான் பெரியவள் ஆனதும் என்னை தான் கட்டிக்கணும்: அஜீத்திடம் கூறிய குட்டி நடிகை
 நான் பெரியவள் ஆனதும் என்னை தான் கட்டிக்கணும்: அஜீத்திடம் கூறிய குட்டி நடிகை சரண்யாவுக்கு அஜீத் குமாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளதாம். சரண்யா அஜீத், பார்த்திபன், தேவயானி நடித்த நீ வருவாய் என படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அப்போது அவAர் விளையாட்டுத் தனமாக அஜீத்தை பார்த்து, நான் வளர்ந்து பெரியவள் ஆனதும் என்னை தான் கட்டிக்கணும் என்று கூறியுள்ளார்.

Saturday, September 14, 2013

இயக்குனர் ரமேஷ்கண்ணாவின் மனைவிக்கு பிடித்த நடிகர் தல அஜித்


செப்டம்பர் 19-ம் தேதி ஆரம்பம் இசை வெளியீடு

சென்னை: அஜீத் நடித்துள்ள ஆரம்பம் படத்தின் இசை வரும் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்- நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள படம் ஆரம்பம். இந்தப் படத்தில் இன்னொரு ஜோடியாக ஆர்யா, டாப்ஸி நடித்துள்ளனர். தெலுங்கு நடிகர் ராணாவும் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் ரீரிக்கார்டிங், மிக்சிங் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. செப்டம்பர் 19-ம் தேதி ஆரம்பம் இசை வெளியீடு
 செப்டம்பர் 19-ம் தேதி ஆரம்பம் இசை வெளியீடு படத்தை தீபாவளிக்கு வெளியிடவிருப்பதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டனர். இந்த நிலையில் படத்தின் பாடல்களை வருகிற 19-ந்தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். முந்தைய அஜீத் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாக்கள் என எந்த நிகழ்வும் பிரமாண்டமாக நடந்தது இல்லை. படத்தில் நடித்துக் கொடுப்பதோடு அஜீத்தும் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார். அந்தப் பாணியிலேயே 'ஆரம்பம்' படப் பாடல்களையும் விழா எதுவும் நடத்தாமலேயே நேரடியாக ஆடியோ கடைகளுக்கு சப்ளை செய்கின்றனர்.

Monday, September 9, 2013

அஜித்தை மிரள வைத்த சிவா

]
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகிவிட்டது.
இதனையடுத்து சிறுத்தை ‘சிவா’ இயக்கும் ‘வீரம்’ படத்தை பொங்கலுக்கு வெளியிட மும்முரமாக இயங்கி வருகிறார் அஜித்.
சமீபத்தில் ‘வீரம்’ படத்துக்காக ஆந்திராவில் ரெயிலில் வைத்து ஒரு பிரம்மாண்டமான சண்டைக் காட்சியை படமாக்கியிருக்கிறார் சிவா.
இவர், இந்த சண்டைக்காட்சியை பிரத்யேகமாக அஜித்துக்கு மட்டும் போட்டுக் காண்பித்தாராம்.
அந்த காட்சிகளை பார்த்த அஜித் மிரண்டு போய்விட்டாராம். சிவாவை கட்டிப்பிடித்து எல்லோமே வித்தியாசமாக இருக்கு.
என்னோட அடுத்த படத்துக்கும் நீங்கதான் இயக்குனர் என சொன்னாராம். இதனால் சிவா ரொம்பவும் சந்தோஷத்தில் உள்ளார்.
‘வீரம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மேலும், விதார்த் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பாரதி