Thursday, May 9, 2013

அறிவில்லாதவர்கள் படிக்க வேண்டியது தப்பா எடுத்துகாதிங்க பொது அறிவு இல்லாதவங்கனு சொல்ல வந்தேன் (சுப்பு ).....

ஆசியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்டவர் - ராபர்ட் கிளைவ் *

*
ஐந்தாண்டு திட்டத்தை அறிமுகபடுத்திய நாடு - ரஷ்யா*

*
தொழிற்சாலையில் நொதித்தல் நிகழ்ச்சியில் பயன்படுவது - ஈஸ்ட் *

*
வளையாமல் நேராக செல்லும் நீளமான ரயில் பாதை உள்ள நாடு - ஆஸ்திரேலியா 478 கி.மீ .*

*
காய்களை பழங்களாக பயன்படுவது - .எதிலின் *

*
உலோகங்களை உருக்கி இணைக்க பயன்படுவது - ஆக்சி அசிடிலின்*

*
விண்வெளியில் உணவாக பயன்படுவது - குலோரெல்லா*

*
முடிச்சாயம் தயாரிக்க பயன்படுவது - வெள்ளி நைட்ரேட் *

*
குடி நீரில் நோய்கிருமிகளை அழிக்க பயன்படுவது - குளோரின் *

*
விவாகரத்துக்கு அனுமதி இல்லாத நாடு - அயர்லாந்து *

*
பட்டாசு தயாரிப்பில் பயன்படுவது - பொட்டாசியம் நைட்ரேட் *

*
உலகில் மிகப்பெரிய தங்க சந்தை உள்ள இடம் - லண்டன் *

*
இலைகளை உதிர்ப்பது போல் கிளைகளை உதிர்க்கும் தாவரம் - செரி*

*
பச்சையம் இல்லாத தாவரம் - காளான் *

*
சிலந்தி வகைகளில் அதிக விஷமுள்ளது - தி பிளாக் விடோ .*

*
நீரில் நீந்தி கொண்டே உறங்கும் உயிரினம் - வாத்து *

*
யானையைப்போல தந்தம் உள்ள விலங்கு - வால்ரஸ்.*

*
நின்று கொண்டே உறங்கும் விலங்கு - குதிரை *

*
ஈர்ப்பு விசை மிக குறைவான கோள் - புதன் *

*
இறந்த உடலை பாதுகாக்க பயன்படுவது - பார்மால்டிகைடு *

*
துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு - ஸ்பெயின் *

*
காந்தியடிகளுக்கு மகாத்மா காந்தி என்ற பட்டதை சூட்டியவர் - ரவீந்தரநாத் தாகூர்

*
உலகிலேயே மிக அதிகமாக நூல்களை எழுதியவர் - அலெக்ஸ்சாண்டர் டூமாஸ்*

*
காந்த கல்லை திசை காட்டும் கருவியாக முதலில் பயன்படுத்தியவர்கள் - சீனர்கள் .*

*
சிய கண்டதிலேயே முதன் முதலில் தொலைகாட்சி பெட்டியை அறிமுகபடுத்திய நாடு -
தாய்லாந்து .*

*
ஐரோப்பாவின் விளையாடு திடல் என வர்ணிக்கபடுவது - சுவிட்சர்லாந்து

*
இந்தியாவிலே நீண்ட நெடுஞ்சாலை - தேசிய நெடுஞ்சாலை எண் 7 ( காசியிலிருந்து
கன்னியாகுமரி வரை )*

*
ஜெர்மனி நாட்டின் தேசிய பூ - சோள பூ *

*
உலகில் தேங்காய் அதிகம் விளையும் நாடு - பிலிப்பைன்ஸ் .*

Wednesday, May 8, 2013

யார் நல்லவர்?

 


துறவியும் உழவன்தான்!
துறவி ஒருவர் ஒரு சமயம் ஒரு விவசாயியிடம் பிச்சை கேட்டார்.

அதற்கு அவன், ``நான் உழுதுண்டு வாழ்கிறேன். நீயும் ஏன் உழைக்கக்கூடாது?'' என்று கேட்டான்.

உடனே துறவி, ``அப்பனே! நானும் ஒரு வகையில் உழவன்தான். தர்மம்என்னும் வயலில் மரியாதை என்னும் கலப்பையால் விடாமுயற்சியெனும் எருது துணை கொண்டு பக்தியெனும் உழவு செய்கிறேன். என் விவசாயத்தில் எனக்கு அமோக விளைச்சல். என்னை நாடிய எல்லோரையும் காப்பாற்றுகிறேன்'' என்றார்.



பதிலுக்கு பதில்
ஒருநாள் பெருந்துறவி ஒருவர் அரசனது மரியாதையை ஏற்று பல்லக்கில் அரண்மனை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். வழியில் அவரைக் கண்ட ஏழைக் குடியானவன் ஒருவன், துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு மரியாதை செலுத்தினான்.

துறவியும் பல்லக்கை விட்டு இறங்கி குடியானவனுக்கு பதில் மரியாதை செலுத்தினார். அப்போது அரசன் துறவியிடம், ``நீங்களோ பெருந்துறவி, தவசீலர். அந்த ஏழை பிரஜைக்கு பதில் மரியாதை செலுத்த வேண்டுமா?'' என்று கேட்டார்.

துறவி புன்னகையுடன், ``என்னை விடவும் பணிவும் மரியாதையும் தெரிந்த ஒருவர் இருப்பதை நான் விரும்புவதில்லை'' என்றார்.



நூறில் இரண்டாவது
தேறுமா?
துரியோதனனின் நூறு சகோதரர்களில் ஒருவர் கூடவா நல்லவரில்லை? இரண்டே இரண்டு நல்லவர்கள் உண்டு.

சூதாட்டத்தில் தருமன் தோற்ற பின்பு, தருமனின் மனைவி திரௌபதியைப் பணயம் வைக்குமாறு சகுனி கூறினான். தருமனும் சம்மதித்து மீண்டும் தோற்றான். சூதாட்டத்தில் `இதைப் பணயம் வை' என்று எதிராளி கூறக் கூடாது. சகுனி கூறி தருமன் வைத்ததால் திரௌபதி பணயப் பொருள் அல்ல. அது தர்மமும் அல்ல. இவ்வாறு கூறியவன் துரியோதனனின் தம்பி விகர்ணன்.

அதே சமயம் இச்செயலைக் கண்டு வெட்கி, தலைகுனிந்து நின்றவன் யுயுத்ஸு. போர்க்களத்தில் அபிமன்யு கொல்லப்பட்டவிதம் அதர்மம் என்று கூறி, போர்க்களத்திலிருந்தே வெளியேறியவனும் இதே யுயுத்ஸுதான். இவனும் துரியோதனனின் தம்பிதான்.

என்னதான் கெட்டவர்கள் என்றாலும் அக்கூட்டத்தில் இரண்டு பேராவது நல்லவர் இருப்பர்.



அரசனும் அடிமைதான்
அரசன் ஒருவன், ஒரு சமயம் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு துறவியை அழைத்து வரச் சொன்னான். அரசன் தன் செல்வச் செழிப்பை அவருக்குக் காட்ட விரும்பினான். ``துறவியே...! உமக்கு என்ன வேண்டுமோ, கேள்! தருகிறேன்'' என்றான். மன்னனின் மனதை அறிந்து கொண்டார் துறவி. ``மன்னா! நீரே, இரண்டு அடிமைகளுக்கு அடிமையாக இருக்கின்றாய்... அப்படி இருக்கும்போது என் தேவைகளை எப்படி நிறைவேற்றி வைப்பீர்?'' என்று கேட்டார் துறவி. ``இந்த நாட்டையே ஆளுகின்ற அரசன் நான். என்னிடம் எத்தனை அடிமைகள் இருக்கின்றார்கள் என்று தெரியுமா? அப்படி இருக்கும்போது, நான் எப்படி இரண்டு அடிமைக்கு அடிமையாக இருக்க முடியும்?'' என்று கோபத்துடன் கேட்டான். ``மன்னா! ஏன் கோபப்படுகிறீர்? எல்லா அரசர்களுமே எனக்குக் கட்டுப்பட்ட இரண்டு அடிமைகளுக்கும் அடிமைப்பட்டுத்தான் இருக்கிறார்கள். அந்த இரண்டு அடிமைகளின் பெயர், ஆசையும் கோபமும்தான். இப்போது சொல்லுங்கள். இந்த இரண்டுக்கும் நீர் அடிமை இல்லையா?'' என்று அமைதியாக கேட்டார் துறவி. மன்னன் மௌனமானான்.



யார் நல்லவர்?
அந்த மடாதிபதி மக்களுக்கு அடிக்கடி அறிவுரை வழங்கினார். ஊர்மக்களும் அவரிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்தனர். ஒரு சமயம் மடத்துக்கு வந்து அவரைச் சந்தித்த இளைஞன் ஒருவன், ``நம் ஊரில் மிருதங்கம் வாசிக்கும் இளைஞன் இருக்கிறானே... அவன் திருடித்தான் வாழ்க்கை நடத்துகிறான். கொடிய பாவி!'' என்றான். அதற்கு அவர், ``அந்தஇளைஞன் அபாரமாக மிருதங்கம் வாசிப்பவன் ஆயிற்றே!'' என்றார். அப்பொழுது இன்னொரு இளைஞன் மடத்துக்குள் நுழைந்து மடாதிபதியை வணங்கி விட்டு, ``ஐயா! நம் ஊரில் மிருதங்கம் வாசிக்கும் இளைஞனை உங்களுக்குத் தெரியுமா? யாராக இருந்தாலும் அவன் வாசிப்பைக் கேட்டால் தங்களை மறந்து விடுவார்கள்'' என்று பாராட்டிப் பேசினான். அதற்கு பீடாதிபதி, ``அவன் ஒரு திருடன் அல்லவா?'' என்றார். மடாதிபதி இப்படிப் பேசியதைக் கேட்டு முதலில் வந்தவன் திகைத்தான். ``ஐயா! அந்த இளைஞனைத் திருடன், பாவி என்றேன் நான். அதற்கு நீங்கள் அவன் அபாரமாக வாசிக்கிறான் என்று பாராட்டினீர்கள். ஆனால் இவர் வந்து அந்த இைளஞனைப் பாராட்டியபோது, நீங்கள் அவனைத் திருடன் என்கிறீர்கள். ஏன் இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறீர்கள்?'' என்று கேட்டான். அதற்கு அந்த மடாதிபதி, ``ஒருவன் நல்லவனா கெட்டவனா என்று மதிப்பிட நாம் யார்? இந்த உலகில் யாரும்நல்லவனுமில்லை, கெட்டவனுமில்லை. அதனால்தான் அப்படிக் கூறினேன்!'' என்றார்.


குருவின் நன்றி!
ஒரு குருவிடம் பல சீடர்கள் பாடம் பயின்று வந்தனர். குருவிற்கு ஒரு பழக்கம் இருந்தது. பாடம் கேட்க சீடர்கள் வரும்போது வணக்கம் சொல்ல அனுமதிப்பார். ஆனால், பாடம் முடிந்து போகும்போது அவர்கள் வணக்கம், நன்றி சொல்ல அனுமதிக்க மாட்டார். மாறாக சீடர்களுக்கு அவர் நன்றி, வணக்கம் கூறி வந்தார். ஒரு நாள் சீடர்கள், ``இது சரியா? ஏன் அப்படிச் செய்கிறீர்கள் என எங்களுக்கு விளக்க வேண்டும்?'' என குருவிடம் கேட்டுக் கொண்டார்கள்.

அவர் சிரித்தபடியே, ``நீங்கள் என்னிடம் ஞானம் கேட்டு வரும்போது, எனக்கு வணக்கம் சொல்வது சரிதான்! ஆனால், இங்கிருந்து செல்லும்போது நான் நன்றி சொல்வதுதான் முறை. என் ஞானத்தை வெளிக்கொணர உதவுபவை உங்கள் கேள்விகளும், உங்கள் சந்தேகங்களும்தான். நீங்கள் கேள்வி கேட்காது விட்டால், என் ஞானம் என் உள்ளே அடங்கிவிடும். எனவே என் ஞானத்தை வெளிக்கொணர உதவியவர்களுக்கு நான்தான் நன்றி சொல்லக் கடமைப்பட்டவன். கிணற்றுக்குள் தண்ணீர் இருந்தாலும் யாருக்கும் பிரயோஜனம் இல்லை. அதை வெளிக்கொண்டு வந்தால்தான் அனைவருக்கும் பிரயோஜனம்'' என்றார். சீடர்கள் மகிழ்ந்து போனார்கள்.

Tuesday, May 7, 2013

ஒழுங்கா படிச்சுட்டு கொஞ்சம் சிரிச்சுட்டு போயிடுங்க .....


கோபு: பச்சை கலர் மாத்திரை ஒரே கசப்பு. சிவப்பு கலர் டியூப் மாத்திரை சப்புனு இருக்கு. டானிக் நல்லா இனிக்குது.

டாக்டர்: இதை ஏங்க என்கிட்ட வந்து சொல்றீங்க?

கோபு: நீங்க தானே மருந்து சாப்பிட்டு எப்படி இருக்குன்னு வந்து சொல்ல சொன்னீங்க...அதான்!

***************************************

கார் டிரைவர்: சாரி சார். பெட்ரோல் சுத்தமா தீர்ந்து போச்சு..இனிமேல் ஒரு அடி கூட முன்னால நகராது.

ஓனர் : சரி ரிவர்ஸ் கியர் போட்டு எடு, அப்படியே வீட்டுக்கு போய்டலாம்!

டிரைவர் :..............###???

***************************************


நண்பர் : இவங்க ஒரே நேரத்துல பிறந்த இரட்டைக் குழந்தைகள்!"

கோபு: அப்படியா... அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?"


***************************************

கோபு: என் பள்ளி வாழ்க்கையிலேயே ஒரே ஒரு முறை தான் ஃபெயில் ஆகியிருக்கேன்.

நண்பர்: பரவாயில்லயே..எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?

கோபு: ஒண்ணாவது வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன் !
**************************
சிரிச்சா டும்டும் தான்

சுப்பு குரங்கு : அம்மா , எனக்கு எப்ப கல்யாணம் பண்ணி வைப்பிங்க

அம்மா குரங்கு : சத்தம் போடாத, பொண்ணு மெசேஸ் படிச்சுட்டு இருக்கு ,
அவ சிரிச்சா உனக்கு கல்யாணம்.

*********************
கோவிந்தா …….. கோவிந்தா …..


திருப்பதி மலைக்கு போய் சாமி கும்மிட்ட பிறகு என்ன செய்ய வேண்டும்

-------

-------


------

------

-----



பொறுமையா கீழ் இறங்க வேண்டும்

*************
பொது அறிவு

ஊர் இருக்கும் , ஆனா வீடு இருக்காது

கடல் இருக்கும் , ஆனா தண்ணிர் இருக்காது

அது என்ன

உலக வரைபடம்
***********
நண்பர் 1: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......

நண்பர் 2: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா??

நண்பர் 1: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு...

*************

மனை‌வி - ஏ‌ங்க உ‌ங்க ‌பிர‌ண்டு‌க்கு பா‌ர்‌திரு‌க்குற பொ‌ண்ணு ந‌ல்லாவே‌யி‌ல்லையே... ‌நீ‌ங்களாவது சொ‌ல்ல‌க் கூடாதா?

கணவ‌ன் - நா‌ன் ஏ‌ன் சொ‌ல்லணு‌ம்.

மனை‌வி - ‌நீ‌ங்க‌ அவர‌் ‌‌பிர‌ண்டுதானே

கணவ‌ன் - அவ‌ன் ம‌ட்டு‌ம் என‌க்கு சொ‌ன்னானா எ‌ன்ன?

***********************************
வீட்டிற்கு சாயங்காலம் அவசரமாக வந்த கணவன் மனைவியிடம், "இன்னைக்கு நைட் நண்பனை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றான்.
அவள் அவசரமாக,"என்ன விளையாடுறீங்களா? வீடு குப்பையாட்டம் கெடக்கு, நான் இன்னும் ஷாப்பிங் ஏதும் செய்யல ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு கூப்டீங்க?"

"இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்டேன்"

"தெரிஞ்சும் எதுக்கு கூப்டீங்க?"

"இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..."
*************
உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?


ஓட்டுவீடு,அபார்ட்மென்ட் இப்படித்தான் கிடைக்கும்...தங்க வீடெல்லாம் கிடையாது.

****************************************************************

நண்பர் 1: அரிசி கிலோ எவ்வளவு?

மிஸ்டர் எக்ஸ் : கிலோ ரூ.50/-

நண்பர் 1: எப்போ கொறையும்?

மிஸ்டர் எக்ஸ் : நான் அளக்கும்போது..........

************************************************************
நண்பர் 1 : உட்கார முடியாத தரை எதுவும் இருக்கா சார்?

மிஸ்டர் எக்ஸ் : ஆமாம், அது பேரு புளியோதரை....

************************************************************

எதுவும் சாத்தியமே!

எதுவும் சாத்தியமே!

( சிவகாசி சுப்புராஜ் )
 



இயற்கையில் இரவும் பகலும் எப்படியோ அப்படியே மனித வாழ்வில் வெற்றியும் தோல்வியும் சகஜம்தான். இரண்டையும் நேசிக்க பழகிக்கொள்வதே நல்ல அனுபவம் என்று கருதப்படுகிறது. வெற்றிகளிலிருந்து நாம் கற்றுக்கொள்வது குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், தோல்விகளிலிருந்தும் தவறுகளிலிருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்றால் அதனை மறுக்க இயலாது. நாம் வெற்றியையும் தோல்வியையும் ஒன்றுபோல் நினைக்க வேண்டும். அப்போதுதான், இரண்டுமே நம்மையே ஏமாற்றி அருகிலும் வரும், விலகியும் செல்லும். மோசமான தோல்விகளையைச் சந்திக்கும் துணிவு கொண்டவர்களால்தான் பெரும் சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே ஆகும். ‘வெற்றி வேண்டுமா போட்டுப் பாருடா எதிர் நீச்சல்’ என்ற பாடல் வரிகள், நாம் வெற்றி பெற வேண்டுமானால் தோல்வி என்னும் கடலில் எதிர் நீச்சல் போட வேண்டும் என தெள்ளத் தெளிவாகவும் நாசூக்காகவும் எடுத்துரைக்கின்றது.

வெற்றி என்னும் மூன்றெழுத்தை விரும்பாதவர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வெற்றி என்னும் வைரம் எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புவோம். வெற்றி என்பது தற்செயலாக நிகழ்வதில்லை. இது நமது மனப்பாங்கின் விளைவே ஆகும். நமது மனப்பாங்கே நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஒன்றாகும். வெற்றி என்பதே குறிக்கோளை அடைவதே என பொருள்படும். குறிக்கோள் இல்லாமல் இருந்தால் நிச்சயமாக வெற்றி என்பதே கிடையாது. குறிக்கோள் இல்லாதவரின் வாழ்க்கை, நடுக்காட்டில் வழி தெரியாமல் தவிக்கும் குருடரின் வாழ்க்கையைப் போன்றது என்கிறார்கள். பேருந்தில் பயணம் செய்யும்போது எந்தப் பேருந்து? எங்கே செல்கிறது? பேருந்தில் ஏறினால் நாம் போய் சேரக்கூடிய இடத்தை அடைய முடியும் என்று எண்ணிதான் செயல்படுகின்றோம். இதிலும் முக்கியமான ஒன்று, எந்த இடத்திற்குப் போகப் போகிறோம் என்ற குறிக்கோள் இல்லையென்றால் நாம் அந்த இடத்திற்குப் போய் சேர முடியாது. அதே போலத்தான் நாம் எந்த ஒரு முயற்சியில் ஈடுப்பட்டாலும், ஒரு குறிக்கோளுடன் செயல்பட வேண்டும்.


வெற்றி என்பது வாழ்வில் நாம் எவ்வளவு உயர்ந்திருக்கிறோம் என்பதைக் கொண்டு அளக்கப்படுவதில்லை என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் விழும் போது எத்தனை முறை மீண்டும் உடனே எழுந்து நின்றிருக்கிறோம் என்பதைக் கொண்டே அளக்கப்படுவதுதான் வெற்றியாகும். மீண்டும் மீண்டும் எழும் இந்தத் திறமையே வெற்றியைத் தீர்மானிக்கின்றது. ‘வீழ்வதே மீண்டும் எழுவதற்குத்தானே’ என்ற அற்புதமான வரிகள் நம் மனதில் பசுமரத்தாணி போலப் பதிய வேண்டும். இங்கு, விழுவது என்பது தோல்வி என்றும் எழுவது என்பது வெற்றி என்றும் பொருள்படுகின்றது. இதனை உணர்ந்தே, ‘ஒரு மனிதனின் வெற்றி, அவனது தோல்விகளில்தான் நிர்ணயிக்கப்படுகின்றதாம். ஏனெனில், அவன் கீழே விழுகிற ஒவ்வொரு முறையும், வேகமாய் முன்னேறுகிறான்’ என்று அழுத்தத் திருத்தமாய்ச் சொல்கிறார் ரால்ஃப் வால்டோ எமர்சன் என்கிற ஓர் அறிஞர். விழும் ஒவ்வொரு முறையும் எழுவதில்தான் நம் சிறப்பு வெளிப்படுமே தவிர, விழுவதில் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தோல்வி என்பது கடுமையானதுதான். ஆனால், வெற்றி பெறுவதற்காக முயற்சி செய்யாமல் இருப்பதுதான் அதைவிட மோசமானதாகக் கருதப்படுகிறது.


நெஞ்சிலே துணிவில்லாதவனுக்குத், தோல்விகளெல்லாம் தடைக்கற்கள். துணிவுள்ளவனுக்கோ, தடைக்கற்கள்கூட அவனைத் தூக்கி நிறுத்துகின்ற படிக்கற்கள்தான் என கூறினால் அது மிகையாகாது. தோல்வி என்பது நம்மோடு நிரந்தர வாசம் புரிய வருகிற ஒன்றல்ல. அது சில சமயங்களில், சில சந்தர்ப்பங்களில், சில இடங்களில் நம்மைத் தொட்டு விடுகிறது. அதனால்தான், இக்கூற்றினை வெற்றிகளை வரவில் வைத்துக் கொள்வதற்கான எத்தனையோ சந்தர்ப்பங்கள், நம்மை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கின்றன என்பதுதான் அதன் பொருள் எனப்படுகிறது. எல்லாத் துறைகளிலும் முழுமைப் பெற்றவனாக, வெற்றி அடைந்தவனாக, எந்தவொரு மனிதனையும் நாம் இனம் காட்டுதல் இயலாது. ஒன்றில் கொடி கட்டிப் பறக்கிறவன், இன்னொன்றில் குப்புற விழுந்து மண்ணைக் கவ்வுகின்றான். ஆக, இப்படி வெற்றியும் தோல்வியும் சராசரி மனிதனின் வாழ்க்கையில் வந்து போகிற சாதாரண சங்கதிகளே என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றையே எண்ணி எண்ணி மனச்சோர்வு காணக்கூடாது. எனவே, இனியாவது புரிந்து கொள்ளுங்கள் வெற்றியின் திரைமறைவில் தோல்விகளும் நம்மைத் தொடரலாம்! தோல்விகளைப் படிக்கற்கற்களாக்கிக் கொண்டால் வெற்றியின் விளிம்பையும் நாம் எட்டிவிடலாம். இதனால்தான், தோல்வியே வெற்றியின் முதற்படி என்ற பழமொழியைக் கூறுகின்றனர். இப்பழமொழி பொய்யல்ல, ஒவ்வொருவரும் உணர வேண்டிய உண்மை என்றால் அது மிகையாகாது. வெற்றி பெற்றவர்கள் அப்படியிலே அமர்ந்து விடுவார்கள். ஆனால், தோல்வி அடைந்தவர்கள்தான் மீண்டும் மீண்டும் முயன்று கொண்டே இருப்பார்கள்.


எந்தத் தோல்வியும் நிரந்தரமில்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கதவு மூடினால், அடுத்த கதவைத் திறக்க முயல வேண்டும். தோல்வி என்பது வாழ்வின் ஓர் அங்கம் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலிருந்து பல அனுபவ பாடங்களைப் படிக்க முடியும் என்பதை நாம் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். தோல்வியின் சுவையினை நாம் அனுபவித்து அறிந்திருந்தால் ‘இனியொருமுறை தோற்கக்கூடாது’ என்கிற மனப்பக்குவம் நமக்குள் வந்து விடும். தோல்வியே வெற்றிக்கான நெடும் பாதையாகும். டாம் வாட்சன் சீனியர் என்பவர், “நீங்கள் வெற்றி பெற விரும்பினால், உங்களுடைய தோல்வியின் சதவீதத்தை இரண்டு மடங்கு ஆக்குங்கள்” என்று கூறியிருக்கின்றார். அவரின் கூற்றானது முற்றிலும் உண்மையே என்று கூறினால், அதுவே உண்மையாகும்.


தோல்வியின்றி வராலாறு படைக்க இயலுமா? நாம் வரலாற்றைப் படிக்கையில், எல்லா வெற்றிக் கதைகளுமே பெரிய தோல்விகளின் கதைகள் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்வோம். ஒரே வித்தியாசம் என்னவென்றால், ஒவ்வொரு முறை அவர்கள் தோல்வி அடையும் போதும், அவர்கள் மீண்டும் எழுகின்றார்கள். இதைப் பின்னடைவு தரும் தோல்வி என்று சொல்வதை விட முன்னேற்றம் தரும் தோல்வி என்று சொல்லலாம். ஆனால், பலரும் வெற்றியின் தாரக மந்திரம் தோல்விதான் என்பதை உணர்வதும் இல்லை, ஏற்றுக் கொள்வதும் இல்லை. மானிடர்களின் இந்த அறியாமை நீங்கும் காலம் எப்போது வருமோ என்று வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். வெற்றி என்பது நாம் சாதிக்கும் விஷயங்களில் இல்லை; சாதிப்பதிலேயே இருக்கின்றது.

தோல்விக்குப் பயந்து சிலர் எப்போதும் முயற்சி செய்வதே இல்லை. அதே சமயம், அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கவும் விரும்பமாட்டார்கள். சாதிக்க விரும்பும் மனிதன் தோல்விகளைப் பற்றியோ எதிர்ப்புகளைப் பற்றியோ, எதிரிகளைப் பற்றியோ, வறுமையைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டு ஒரே இடத்தில் நின்று காலத்தை வீணாக்கமாட்டான். எப்படி இதை எதிர்கொள்வது என்று செயல்பட ஏற்ற வழி எதுவோ அதைத் தேர்ந்தெடுத்து முடிக்க நடை போட ஆரம்பித்து விடுவார்கள். ‘தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எல்லா வாசல்களும் திறந்து வரவேற்பு கொடுக்கும்!’ என்கிறார் எமர்சன்.


நாம் சரியான மனப்பாங்கு உள்ளவராக இருந்தால், தோல்வியை ஓர் ஆசிரியராகத்தான் கருதுவோம். ஆசிரியர் என்பவர், நாம் ஒன்றைப் பற்றி தெள்ளத் தெளிவாகவும், ஆழமாகவும் கற்றுக் கொள்வதற்கு எவ்வாறு துணைபுரிகிறாரோ, அவ்வாறே இந்தத் தோல்வியும் வெற்றி என்னும் சிகரத்தை அடைவதற்கான நேர் பாதையை நன்றாக தெரிந்து கொள்ளத் துணை புரிகின்றது. தோல்வி அடையும் போது நாம் ஏமாற்றமடையலாம். ஆனால், முயற்சி செய்யாமலேயே இருந்து விட்டால், முற்றிலும் அழிந்துபோக நேரிடலாம். எனவேதான், தோல்வியிலிருந்து ஆதாயமடைவதே வெற்றியின் திறவுகோல் என்றும் கூறுகின்றனர். ஒவ்வொரு தோல்வியும் நமக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஒரு பள்ளிக்கூடம், ஒரு பாடநூல், ஒரு ஆய்வுக்கூடம், ஒரு அனுபவம் என பலவாறு கூறுகின்றனர். அதனால்தான், தோல்வியை ஆசிரியருக்கு ஒப்பிட்டுள்ளேன். தோல்வி என்பது ஒரு சுற்றுப் பாதையே தவிர அதுவே முடிவாகாது. இது ஒரு தாமதமே தவிர பேரிடியில்லை என்பதை முதலில் நாம் மனதில் ஆழமாக பதிய செய்ய வேண்டும். அப்போதுதான், தோல்வியைக் கண்டு பயப்படாமல் அதனை துச்சமாக எண்ணி வெற்றியின் இலக்கை நோக்கிப் பீடுநடைப் போடுவோம்.நாம் பெற்ற அனுபவத்திலிருந்துதான் ஒன்றைப் பற்றி நாம் கற்றுக்கொள்வோம். எனவே, நாம் செய்த தவறுகளுக்கு அனுபவம் என்ற பெயர் பொருந்தும் என்றால் அது மிகையாகாது.

வெற்றி பெற வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள், அப்படி விரும்பினால் மட்டும் போதுமா..? எதிர்படும் தோல்வியைப் புறமுதுகு காட்டாமல் எதிர்கொள்ள வேண்டும். ‘தோல்வியைக் கண்டு பயந்துவிடாதே’, என்ற பாடல் வரியை நாம் அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டே இருந்தால், தோல்வி எனும் மூன்றெழுத்தின் பயம் சூரியனைக் கண்ட பனிப்போல மறைந்துவிடும். தோல்வி பற்றிய பயம் பல சமயம் தோல்வியை விட மோசமாக இருக்கலாம். ஆனால், நாம் அதனைக் கண்டு ஒரு போதும் துவண்டு விடக்கூடாது. தோல்வியைக் கண்டு துவண்டு போவதால் ஒரு பயனுமில்லை. அதை நேருக்கு நேர் எதிர்கொண்டு, எந்தத் தோல்வியும் என்னை தடுத்துவிட முடியாது என்றும் அதை நான் அனுமதித்தால் மட்டுமே என்னை அது முடக்க முடியும் என்று உறுதி கொள்வபர்களே வெற்றியாளர்கள். தோல்விகள் கொடுத்த பாடங்களிலிருந்து புதிய வெற்றிக்கான அடித்தளம் அமைக்க வேண்டும். தோல்வி என்பது நம் வாழ்வில் நடக்கும் ஒரு பயங்கர நிகழ்ச்சியில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தோல்விகள் நம்மைத் துன்புறுத்தும் போது அந்த எண்ணத்தை விரட்டி அடிக்க நாம் முன்பு அடைந்த சிறு சிறு வெற்றிகளை நினைத்து மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.

“ஒவ்வொரு தோல்வியும் ஓர் அனுபவம்,
ஒவ்வொரு இழப்பும் ஒரு லாபம்,
ஒவ்வொரு நட்டமும் ஒரு பட்டறிவு,
ஒவ்வொரு காணமல் போதலும் ஒரு தேடல்”,

என்று தோல்வியை வெற்றியாக மாற்றும் மந்திரத்தைச் சொல்கிறார் நம் வெ.இறையன்பு.


முயற்சியில் வெல்ல வேண்டும், எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நாம் விரும்பினால் ‘இயலும்’ என எண்ணித் துணிந்தால் தான் உண்டு. இல்லையேல் தோல்வியும் துயரமும்தான் நம் முயற்சிகள் அனைத்தையும் பின் தொடர்ந்து கொண்டு இருக்கும். இயலாது என்பது முட்டாள்களின் வாதம். எனவே என்னால் இது இயலாது, எனக்கு அது தெரியாது, இது தெரியாது என்று சொல்லாதே ‘முயற்சி செய்து பழகிக்கொள்’ என்கிறார் நம் புரட்சிக்கவி பாரதியார். எனவேதான், ‘வெற்றியில் ஆசை வை’ என்கிறார் அறிஞர் அப்துல் ரஹீம். என்னால் இயலாது என எண்ணிக் கொண்டிருப்பவன் ஒருமுறை தோல்வியுற்ற பின், ‘இயலாது’ எனும் பயனற்ற மந்திரத்தைத் தன் மனதில் பதித்துக் கொண்டு மீண்டும் முயல முற்படமாட்டான். அம்மந்திரத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, வெற்றி கிட்டும் வரை நாம் கண்டிப்பாக முயல வேண்டும் என்று மன உறுதியுடன் போராட வேண்டும்.

நமக்குள் இருக்கும் தோல்வி மனப்பான்மையை எடுத்து வெளியே வீசிவிட்டு அந்த இடத்தில் வெற்றி மனப்பான்மையை நிரப்ப வேண்டும். சிறு குழந்தையைப் பார்த்தோமானால், அது நடைப்பழகக் கற்றுக்கொள்ளும் போது, விழுந்து கொண்டே இருக்கும். ஆனால், அக்குழந்தைக்கு அது தோல்வியல்ல. ஆகையால், விழுந்ததும் மீண்டும் எழுந்து கொள்கின்றது. பல முறை விழுந்திருந்தாலும் நன்றாக நடக்க கற்றுக்கொண்ட பின் அதன் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தெரியும். குழந்தை மட்டும் மனச்சோர்வு அடைந்து முயற்சியைக் கைவிட்டு விட்டால், அதனால் ஒரு போதும் நடக்க இயலாது. பயத்துடன் மண்டியிட்டு வாழ்வதைவிட, துணிவுடன் நின்று கொண்டு சாவதே மேல். கீழே விழுந்து விட்டீர்களா.. பரவாயில்லை. அதற்காக வருத்தமோ வெட்கமோ கொள்ளாதீர்கள். அடுத்து அடியெடுத்து வைக்க அந்த அனுபவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு நீங்கள், தோல்வி என்னும் தூசியை தட்டி விட்டு புறப்படுங்கள். சிறு குழந்தையே பல முறை விழுந்து மீண்டும் எழுந்து நடக்கும் போது நம்மால் முடியாத என்ன? நீங்கள் மேற்கொள்ளும் வேலையில், தொழிலில் தோல்வி ஏற்பட்டால் அதைவிட்டு நகர்ந்து விடாதீர்கள். எப்போதும் தோல்வி என்பது மீண்டும் ஒரு முயற்சியை இன்னும் திறமையுடன் தொடங்குவதற்கு வழங்கப்படும் வாய்ப்பாகும். எனவே, தோல்விக்கான காரணத்தை அறிந்து கொண்டு அதைத் திருத்திக் கொண்டு அடுத்த முயற்சி செய்ய என்றுமே கற்றுக் கொள்ள வேண்டும். “நான் சிறுவனாக இருந்தபோது, நான் செய்த பத்து முயற்சிகளில் ஒன்பது முயற்சிகள் தோல்வியில் முடியும். நான் அந்த தோல்வியைத் தவிர்ப்பதற்காக என்னுடைய உழைப்பைப் பெருக்கி, என் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைக் கைப்பற்றி வந்தேன்” என்கிறார் நாடக மேதை பெர்னாட்ஷா. இவரின் கூற்றை நாம் சற்று உற்று நோக்கினாலே நமக்கு தோல்வியிலிருந்துதான் பல அரிய கருத்துகளைக் கற்றுக்கொண்டு முயற்சி அடைய முடியும் என்ற உண்மை நன்குப் புலப்படும்.

தோல்வி இன்றி வரலாறா? தாமஸ் ஆல்வா எடிசனை விடவா நீ தோற்கப் போகிறாய்? நெப்போலியன் மூன்றில் இரண்டு பங்கு போரில் தோற்றவர்தான். பதினாறு முறை வாழ்க்கையில் தோல்வி கண்டவர்தான் ஆபிரகாம் லிங்கன். பதினேழு முறை தோற்று வெற்றி கண்டவர்தான் கஜினி முகமது. பலமுறை முயன்று தோல்வியுற்றுதான் அச்சிறு உருவத்தைக் கொண்ட சிலந்தியே வலை பின்னுகிறது. நான் இதுவரை குறிப்பிட்டவர்கள் கூட தோல்வியைக் கண்டு, சற்று சோர்வுற்றிருக்கலாம். ஆனால், சிலந்தி தோல்வியைக் கண்டு சோர்வுற்று தன் முயற்சியிலிருந்து பின் வாங்கியதாக சரித்திரம் ஏதும் இல்லை. தோல்விகளைப் பெரிய மலைகளாக எண்ணாமல், அதனை மண் மேடுகளாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் தோல்வியின் சுமை நம்மை அழுத்தாது. தோல்வியை ஏற்றுக்கொண்டு முயன்றால் வெற்றி நிச்சயம், அதுவே வேத சத்தியம். “முன் வைத்த காலைப் பின் வைப்பதில்லை. வெற்றிக்கு முன்னர் ஓய்வென்பதில்லை” என்று செயல்படு. வெற்றி மாலை உனதாகும்.

இறுதியாக, ‘தோல்வியே வெற்றியின் முதற்படி’ எனும் பழமொழியின் விளக்கத்தை நாம் நன்குப் புரிந்து கொண்டு தோல்வியை மனதார ஏற்றுக் கொண்டு, வெற்றியை நோக்கிப் பீடுநடை போடக் கற்றுக் கொள்ள வேண்டும். இறைவன் படைப்பில் இன்றியமையாத நாம் நினைத்தால் எதுவும் சாத்தியமே!

Monday, May 6, 2013

தண்ணீர்... தண்ணீர்...! உபயோகமான தகவல்கள்


உயிரினங்கள் அனைத் தும் வாழ இன்றியமையாதது தண்ணீர். இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. ஜீவராசிகளின் உயிர் நாடியாய் உள்ள தண்ணீர் இப்போது பல்வேறு வகைகளில் மாசுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலை நீடித்தால் குடிநீருக்காக 3-வது உலகப்போர் ஏற்படும் என்று உலக நாடுகள் எச்சரிக்கை மணி அடித்துள்ளன. 

எனவே நாம் நீராதாரங்களை காப்பதை முக்கிய கடமையாக கொண்டு செயல்பட வேண்டும். நீர் மாசுபட்டால் அனைத்து நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். உயிர் காக்கும் தண்ணீரின் அவசியத்தையும், அவற்றின் பயன்பாடுகளையும், தண்ணீரைப்பற்றிய அரிய தகவல்களையும் இங்கு காண்போம்.
 

இந்தியாவில் குடிநீர் தேவை.........
 

* இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த அளவுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்தியாவில் 82 சதவீதம் விவசாயத்திற்கும், 10 சதவீதம் தொழிற்சாலைகளுக்கும், 8 சதவீதம் மக்கள் பயன்பாட்டிற்கும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
 

* அமெரிக்கா ஒரு நாளைக்கு 346000 மில்லியன் காலன் தண்ணீரை பயன்படுத்துகிறது.
 

* அமெரிக்கா தனது நாட்டில் உள்ள தண்ணீரில் 80 சதவீதத்தை விவசாயத்திற்கும், மீதியை மின் உற்பத்திக்கும் பயன்படுத்துகிறது.
 

* அமெரிக்க குடிமகன் ஒரு நாளைக்கு 80 முதல் 100 காலன் தண்ணீரை பயன்படுத்துகிறான்.
 

மனிதனும் தண்ணீரும்..........
 

* மனித உடலில் 70 சதவீதம் தண்ணீர் உள்ளது.
 

* பிறக்கும் குழந்தையின் எடையில் 80 சதவீதம் தண்ணீர்தான்.
 

* மனிதன் ஆரோக்கியமாக வாழ தினமும் 8 டம்ளர்
   தண்ணீர் குடிக்க வேண்டும். 

* தண்ணீர் அதிகம் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் தானாக வெளியேறும்.
 

உலகமும் தண்ணீரும்..........
 

* உலகத்தில் 70 முதல் 75 சதவீதம் பகுதியை தண்ணீர் சூழ்ந்துள்ளது. பூமிக்கு மேல் உள்ள நீராதாரங்களை விட நிலத்தடி நீரே சுத்தமானது. சுகாதாரமானது.
 

* ஆண்டாண்டு காலமானாலும் தண்ணீரின் அளவு மாறப்போவதில்லை. உலகம் தோன்றியது முதல் அதே அளவு தண்ணீர்தான் உள்ளது.
 

* உலகில் உள்ள மொத்த தண்ணீரின் அளவு 326 மில்லியன் கியூபிக் மைல்ஸ்.
 

குடிநீரின் அவசியம்..........
 

* ஒரு மனிதன் உணவு சாப்பிடாமல் ஒரு மாதம் வாழ முடியும். ஆனால் ஒரு வாரத்துக்கு மேல் தண்ணீர் குடிக்காமல் வாழ முடியாது.
 

* மனித உடல் சீராக இயங்க கண்டிப்பாக தண்ணீர் தேவை.
 

* தண்ணீர் மனிதன் உயிர்வாழ தேவையான சக்தியை அளிக்கிறது.
 

* சுத்தமான தண்ணீரை குடிப்பதன் மூலம் நோய் தடுப்பாற்றலை பெறலாம்.
 

* தண்ணீர் அதிகம் குடித்தால் தலைவலி வராது.
 

* ஆரோக்கியமான - அழகான தோற்றத்துக்கு தண்ணீர் அவசியம்.
 

* உணவு செரிக்கவும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதும் தண்ணீரின் தலையாய பணி.
 

* உடலுக்கு தேவையான சத்துக்களை அந்தந்த பாகங்களுக்கு எடுத்துச் செல்ல தண்ணீர் அவசியம்.
 

பழங்கள்-காய்கறிகளில்..........
 

* உலகின் சராசரி மழை அளவு 850 மி.மீ.
 

* உலகின் தட்பவெப்ப நிலையை பேணிக் காப்பதில் தண்ணீரின் பங்கு அதிகம்.
 

* விலங்குகளின் ரத்தம், தாவரங்களின் திசுக்கள் ஆகியவற்றில் தண்ணீரின் அளவு அதிகம்.
 

* நீரின்றி அமையாது உலகு.
 

* தக்காளியில் 95 சதவீதமும், மாங்காயில் 65 சதவீதமும், தர்பூசணியில் 95 சதவீதமும், அன்னாசியில் 87 சதவீதமும் தண்ணீர் உள்ளது.
 

அதிர்ச்சி தகவல்கள்.........
 

* உலகில் 1.5 பில்லியன் மக்கள் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
 

* தண்ணீர் தொடர்பான நோயால் ஆண்டுக்கு 4 மில்லியன் மக்கள் மரணத்தை தழுவுகிறார்கள்.
 

* அசுத்தமான தண்ணீரே காலராவுக்கு மூல காரணம். இதன் மூலம் 43 சதவீதம் பேர் மரணத்தை தழுவுகிறார்கள்.
 

* வளரும் நாடுகளில் நிகழும் மரணங்களில் 98 சதவீதம் தண்ணீரால் ஏற்படுகிறது.
 

* சுகாதாரமற்ற
  தண் ணீரை குடிப்பதால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் காலராவால் மடிகிறார்கள். 

* ஆப்பிரிக்க வாழ் பெண்கள் ஒருநாளைக்கு 16 மணி நேரத்தை தண்ணீர் தேடி அலைவதிலேயே செலவழிக்கிறார்கள்

போட்டுத் தாக்கும் அ‌‌ஜீத் பட டீஸர்

ஏப்ரல் 30 நள்ளிரவில் வெளியிட்டார்கள் வெறும் 42 விநாடிகள்தான். கடந்த நிமிடம்வரை பல லட்சம் பேர் இந்த டீஸரை பார்த்து பரவசமடை‌ந்திருக்கிறார்கள்.

தகவல் தொழிலநுட்ப உலகில் ஒரு ஃபோட்டோவை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதும்கூட வியாபார முக்கியத்துவம் வாய்ந்ததுதான். இது வரப்போகிற படத்தின் ட்ரைலர் பற்றி சமாச்சாரம். விடுவார்களா…?

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அ‌‌ஜீத் நடித்திருக்கும் புதிய படத்தின் டீஸரை அ‌‌ஜீத் 53 என்ற பெய‌ரில் (இது அ‌‌ஜீத்தின் 53வது படம் என்பதால் அப்படியொரு பெயர்) ஏப்ரல் 30 நள்ளிரவில் வெளியிட்டனர்.

மே 1 அ‌‌ஜீத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த 42 விநாடிகள் ஓடக்கூடிய டீஸரை இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமானமுறை பார்க்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் எந்த தமிழ் டீஸருக்கும் இதுபோன்ற ஆதரவு இருந்ததில்லை. இந்திய அளவில் இந்த டீஸர்தான் இப்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

அ‌‌ஜீத் ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்ட பிறகும் இப்படியொரு வரவேற்பு. ஏம்பா ரசிகர்களே நீங்க எங்கதான் இருக்கீங்க…?

Thursday, May 2, 2013

அஜித் 53 புதிய ரெக்கார்ட்...யூடியூப்பில் 1 மில்லியனை நோக்கி...!

இன்னும் பெயரிடப்படாத தல அஜித்தின் 53வது படம் பெரிய எதிர்பார்ப்பை அவரது ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளதை மறுக்கமுடியாது. நேற்று அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக இப்படத்தின் இயக்குனரான விஷ்ணுவர்தன் யூடியூப் தளத்தில் அஜித் 53க்கான டீஸரை வெளியிட்டார்.
ajith 53 teaser is huge hit as expected sets records

இது வெளியாகி 1 நாளே ஆனா நிலையில் 9 லட்சம் பார்வைகளை கடந்து 1 மில்லியன் இலக்கை இன்னும் சில மணிநேரங்களில் தொட்டுவிடும் எனத்தெரிகிறது. இந்தியாவிற்கான யூடியூப் பக்கத்தில் இதுவே தற்பொழுது முதலிடத்தில் உள்ளது. யூடியூப் மட்டுமல்லாது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களிலும் பெருமளவில் பகிரப்படுகிறது. இதுவரையிலும் தமிழ் திரைப்பட வீடியோ ஒன்று இவ்வளவு பெரிய வரவேற்பை பெறவில்லை என்றநிலையில் இது ரெக்கார்ட் படைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.
இந்த யூடியூப் டீஸரிலேயே படத்துக்கு தலைப்பு இன்னும் வைக்கவில்லை எனவும் தல தெரிவித்துள்ளார். தலைப்பே வைக்காமல் ஒரு படம் இவ்வளவு வரவேற்பை பெற்றது திரைத்துறை சார்ந்தவர்களே பிரமித்து பார்க்கிறார்கள்.
யூடியூப் தளத்தில் அஜித் 53க்கான டீஸரை பார்க்க...