Friday, April 27, 2012

Billa-2சண்டை காட்சியில் யதார்த்தத்தை வெளிகொணர்ந்த அஜித்!

எந்த மீடியாவைத் திருப்பினாலும் அஜீத்தின் பில்லா 2 செய்திகள்தான். படத்தின் விற்பனை, அஜீத்தின் சண்டைக் காட்சிகள், பிரமாண்ட ரிலீஸ் குறித்துதான் பலரும் பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் படத்தைப் பற்றி பே� �� மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே, முன்னணி இதழ்களுக்கு பேட்டிகள் தர ஆரம்பித்துள்ளார் அஜீத்.

இப்படத்தில் ஆபத்தான ஹெலிகாப்டர் சண்டை காட்சியொன்றில் அஜீத் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளது பற்றி
நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். அஜீத்தின் இந்த த்ரில் பைட் அவரது ரசிகர்களுக்கு பெரும் ஷாக் தருவதாக இருந்தது. ஆனால் இந்த ரிஸ்க்கான பைட் குறித்து அஜீத் என்ன சொல� �கிறார் தெரியுமா...?

"ஹெலிகாப்டர் சண்டை காட்சியில் நான் உயிரை பணயம் வைத்து சண்டை போட்டது பெரிதாக பேசப்படுகிறது. இதற்கான பெருமை மொத்த படக் குழுவினரையும் சேரும். இந்த சண்டைக்காட்சியை படமாக்கிய ஜெர்மன் ஸ்டன்ட் மாஸ்டர் ஸ்டிபன் ரிச்டருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

வாங்குகிற சம்பளத்துக்கு வேலை செய்கிறேன். எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன ராணுவ வீரர்களை விட பெரிதாக சாதித்து விடவில்லை. ராணுவ வீரர்கள் தான் நிஜ ஹீரோக்கள். அவர்கள் சண்டைதான் பெருமைக்குரியது.

என் படங்கள் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. படம் எப்படிப்பட்டது என்று ரசிகர்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்.

நான் தேர்வு செய்யும் கதைகள் இயக்குனர், தயாரிப்பாளருக்கும் பிடித்து இருக்க வேண்டும். மூவரையும் கதை கவர்ந்தால்தான் படம் சிறப்பாக வரும். ந� �்ல கதை சொல்பவர்கள் எல்லோரும் சிறந்த இயக்குனர்கள் என்று கூறிவிட முடியாது. அது போல் கதை சொல்ல தெரியாதவர்கள் கூட சிறந்த இயக்குனர்களாக இருப்பார்கள் என் அனுபவம் மூலம் இதை உணர்ந்துள்ளேன்," என்றார்.

Thursday, April 26, 2012

'தல தல'தான்: பார்வதி புகழாரம்!




Parvathy Omanakuttan is all praise for Ajith அஜித் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக நான் கொடுத்து வைத்திருக்கிறேன் என்று பார்வதி ஓமணக்குட்டன் கூறியுள்ளார். வெள்ளை மார்பிளில் செய்த சிலை போல வசீகர புன்னகையோடு, வாட்ட சாட்டமான உடல் அழகோடு கண்காட்சியில் வைத்த பொம்மை போல அழகாக இருக்கிறார். 'பில்லா-2' படத்தில் அஜித்துடன் அமர்க்களமாக அறிமுகமாகியுள்ள பார்வதி ஓமணக்குட்டன் நம்மிடம் பேசியதாவது, தமிழ் சினிமா மிகப்பெரிய இண்டஸ்ட்ரீ. இங்கு திறமையான சிரத்தை எடுத்து வேலை பார்க்கும் மக்கள் அதிகம் இருக்காங்க. அவர்களோடு சேர்ந்து நானும் வேலை பார்ப்பது ஒரு இனிய அனுபவம். என்னுடைய முதல் அறிமுக படமே அஜித் சார் படம் என எண்ணும் ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நினைத்தாலே பெருமையாக இருக்கு. அஜித் பற்றி சொல்லணும் என்றால் அவர் ஒரு நல்ல மனிதர், நல்ல நடிகர், ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய உதவிகள் செய்வார். என்ன மாதிரியான புதுமுகங்களுக்கு அவர் ரொம்ப சப்போர்ட்ட பண்ணுவார். 'பில்லா-2' படம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனையும் இருக்கும். இப்படி ஒரு தமிழ் சினிமாவில் நானும் ஒரு பார்ட்டா இருக்கேன் என்று நினைத்தால் ரொம்ப பெருமையாக இருக்கிறது. அஜித் படத்தில் அறிமுகமாக நான் கொடுத்து வைத்திருக்கிறேன். மொத்தத்தில் அஜித் ரசிகர்கள் கூறுவது போல தல தலதான் என்று சொல்லி முடித்தார். பட்டாம்பூச்சிக்கு பெருமிதத்த பாருங்கப்பா.....?!

Friday, April 20, 2012

சண்டைக்காட்சிகளில் அஜித் மிரட்டினார்: பில்லா-2 சண்டை பயிற்சியாளர் பேட்டி!


பில்லா-2 படத்தில் எதிர்பார்த்ததை காட்டிலும் சண்டைக்காட்சிகளில் அஜித் மிரட்டினார் என்று அப்படத்தின் சண்டை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் *கெச்சா கம்பாக்டி கூறியுள்ளார். அஜித்தின் பில்லா படம் வெற்றி சூப்பர் டூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து அதன் 2ம் பாகமாக பில்லா-2 உருவாகி வருகிறது. உன்னைப்போல் ஒருவன் டைரக்டர் சக்ரி டோல்டி இப்படத்தை இயக்குகிறார். அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் முடிந்து, ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் பில்லா-வை காட்டிலும் பில்லா-2வில் மிரட்டலான சண்டைக்காட்சிகளை படமாக்கியுள்ளனர். சமீபத்தில் யூ-ட்யூப்பில் வெளியான இப்படத்தின் டிரைலர் அனைவரையும் வியக்கத்தக்க வகையிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. அந்த அளவுக்கு ஹாலிவுட் படங்களுக்கு சமமாக மிரட்டலான சண்டைக்காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

இதுகுறித்து இப்படத்திற்கு சண்டைக்காட்சி அமைத்து கொடுத்த ஜயிக்கா ஸ்டன்ட் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கெச்சா கம்பாக்டி கூறுகையில், தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிரட்டலான சண்டைக்காட்சிகள் பில்லா-2வில் இடம்பெற்று இருக்கிறது. அப்படி மிரட்டலான சண்டைக்காட்சிகளை அமைப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல, அதற்கு படத்தின் ஹீரோவின் முழு ஒத்துழைப்பும் அவசியம். பில்லா-2 சண்டைக்காட்சிகளில் அஜித் பிரமாதமாக நடித்து கொடுத்தார். அதிலும் குறிப்பாக வித்யூத் ஜமாலுடன் அவர் மோதும் சண்டைக்காட்சிகள் ரொம்பவே மிரட்டலாக வந்திருக்கிறது. ஜார்ஜியாவில் சண்டைக்காட்சி படமாக்கியது ரொம்பவே சவாலாக அமைந்தது. அங்கு அதிகப்படியான பனிபடர்ந்து காணப்பட்டதால் சூட்டிங் நடத்த சிரமமாக இருந்தது. படத்தில் 75 சதவீத காட்சிகள் படமாக்கிவிடுவோம். திடீரென பனிபடர்ந்து விடும். இதனால் திரும்பவும் அந்தக்காட்சியை படமாக்குவோம் என்றார்.

டைரக்டர் சக்ரி டோல்டி பற்றி கெச்சா கூறுகையில், திறமையான டைரக்டர் சக்ரி. எந்த ஒரு காட்சியும் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அவர் நினைத்தபடி காட்சிகள் வ*ர வரைக்கும் அதில் திருப்தி அடையமாட்டார். படப்பிடிப்பில் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டார். அதனால் நாங்க நினைத்தபடி சண்டைக்காட்சிகளை அமைக்க முடிந்தது. அதற்காக அவருக்கு என் சார்பாகவும், எனது குழுவினர் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பில்லா-2 படம் மூலம் எங்களுக்கு நிறைய நட்பு வட்டாரம் கிடைத்திருக்கிறது. மீண்டும் சக்ரியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாய் இருக்கிறோம்.

அஜித் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அஜித் ரொம்ப ஆற்றல் மிக்கவர், பண்புள்ளவர், மரியாதை மிக்கவர், மற்றவர்களுடன் எளிதாக பழகும் நல்ல நண்பர். ஏற்கனவே அஜித்துடன் நாங்கள் பணியாற்றி இருக்கிறோம். மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. எதையும் துணிந்து செய்யவும், அதற்கான முயற்சி மற்றும் ஆர்வம் அஜித்திடம் அதிகம் இருப்பதால், அவரை வைத்து சண்டைக்காட்சிகளை படமாக்க எங்களுக்கு ஈசியாக அமைந்தது. நாங்கள் நினைத்ததை காட்டிலும் அஜித் பிரமாதமாக சண்டைக்காட்சிகளில் நடித்து படக்குழுவினரையே மிரட்டிவிட்டார். தொடர்ந்து இந்திய மற்றும் தமிழ் படங்களில் பணியாற்ற ஆர்வமாய் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.