செவாலியே சிவாஜியின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு தற்போது கும்கி படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பின் போது அவர் காட்டும் ஆர்வமும், கடின உழைப்பும் பற்றி கேள்விப்பட்ட அஜீத், நேரடியாக விக்ரம் பிரபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
கடின உழைப்பு குறித்து பாராட்டிய அஜீத், சிறந்த படங்களில் நடித்து பெயர் எடுக்க வேண்டும் என்று வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பில் உருவான அஜீத்தின் அசல் படத்தை விக்ரம் பிரபுவும், அவரது சகோதரரும் தயாரிப்பு மேற்பார்வை பணிகளை செய்த போது, விக்ரம் பிரபுவும், அஜீத்தும் நண்பர்களாகியுள்ளனர்.
இந்த நட்பின் அடையாளமாகத்தான் அஜீத் விக்ரம் பிரபுவிற்கு தொலைபேசி அழைப்பு விடுத்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment